தேவையானவை:
மட்டன் | 50 கிராம் |
சேமியா | அரை கிலோ |
எண்ணெய் | கால் கப் |
நெய் | அரை கப் |
இஞ்சி&பூண்டு விழுது | 2 டீஸ்பூன் |
கரம் மசாலாத்தூள் | அரை டீஸ்பூன் |
மிளகாய்த்தூள் | 1 டீஸ்பூன் |
தயிர் | 2 டீஸ்பூன் |
வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் | 3 |
கொத்தமல்லி, புதினா | அரை கட்டு |
தேங்காய்ப்பால் | 1 கப் |
எலுமிச்சம்பழம் | அரை பழம் |
உப்பு | தேவையான அளவு |
செய்முறை:
மட்டனை நன்றாக கழுவிக்கொள்ளவும், அதில் பாதியளவு தயிர், பாதியளவு மிளகாய்த்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து 1மணிநேரம் ஊற வைக்கவும்.
வாணலியில் சிறிதளவு நெய் விட்டு சேமியாவைப் போட்டு பொன்னிறமாக வருக்கவும், பிரஷர் பேனில் நெய் மற்றும் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தைப்போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
இதனுடன் இஞ்சி&பூண்டு விழுது, கரம்மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும். மீதமுள்ள மிளகாய்த்தூள், பச்சைமிளகாய், தக்காளி, புதினா, கொத்தமல்லித் தழை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
பின்னர் ஊறவைத்த மட்டன் கலவை சேர்த்து 3விசில் வரும் வரை வேகவிடவும். பின்னர் மூடியைத் திறந்து, வறுத்த சேமியா சேர்த்து அடுப்பை 20 நிமிடம் சிம்மில் வைத்திருந்து அணைக்கவும்.