சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
தற்போதைய நிலவரப்படி ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
தெலுங்கானாவில் சந்திரசேகரராவின் டிஆர்எஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
மிசோரமில் மிசோ தேசிய முன்னணி வெற்றி பெற்றுள்ளது.
மிசோரமில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தற்போது ஆட்சியை இழந்துள்ளது.
ராஜஸ்தானில் பாஜக தனது ஆட்சியை இழந்துள்ளது.