குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் வண்டி ஏலத்திற்கு விடப்படும்..!

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது போக்குவரத்து போலீசார் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து வருகின்றனர். ஆனால் பல வாகன ஓட்டிகள் அபராத தொகையை செலுத்தாமல் வாகனத்தை இயக்கி வருகின்றனர்.
இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக போக்குவரத்து போலீசார் அபராத தொகையை செலுத்துமாறு நீதிமன்றம் மூலமாக வாரண்ட் பெற்று வாகன ஓட்டிகளுக்கு அனுப்புகின்றனர். வாரண்ட் வழங்கிய 14 நாட்களுக்குள் அபராத தொகையை செலுத்தவில்லை என்றால் வண்டி பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்துக்கு விடப்படும் என போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.
கடந்த ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை அபராத தொகையை செலுத்தாத 50 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதனை ஏலத்திற்கு விட இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இது வாகன ஓட்டிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது