பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய்..!! வெளியான அதிர்ச்சி தகவல்

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் உள்பட சில நோய்கள் வர வாய்ப்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடக மாநிலத்தின் உணவு பாதுகாப்பு துறை சாலையோரம் உள்ள பானிபூரி கடைகளில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனையில் பானிபூரியில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்றும் குறிப்பாக புற்றுநோயை உருவாக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளன.

இதனை அடுத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பானிபூரி கடைகளிலும் சோதனை நடத்த உணவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பானிபூரி கடைகளில் பயன்படுத்தப்படும் பூரி மசால், மசாலா நீரின் மாதிரிகளை சோதனை செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பலரும் விரும்பி சாப்பிடும் உணவான பானிபூரியால் புற்றுநோய் ஏற்படும் என்ற தகவல் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recent Post

RELATED POST