
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலால் படியில் தொங்கியபடி பயணம் செய்த 5 பேர் மின் கம்பத்தில் மோதி கீழே விழுந்து உயிரிழந்தனர்.
மேலும் காயமடைந்த பயணிகள் ராயப்பேட்டை மற்றும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை கடற்கரையிலிருந்து திருமால்பூர் செல்லும் ரயிலில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
கோடம்பாக்கம்-மாம்பலம் இடையே உயர் மின் அழுத்த கம்பி அறுந்ததால் புறநகர் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
போதுமான அளவு ரயில்கள் இயக்கப்படாததால் இந்த விபத்து நடந்ததாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.