ஒரு ஸ்பூன் தக்காளிச் சாறுடன் ஒரு டீஸ்பூன் பன்னீர் கலந்து தினமும் முகத்தில் தடவலாம்.
உருளைக்கிழங்குக்கு சருமத்தை பிளீச்செய்யும் தன்மை உண்டு. 2 டீஸ்பூன் உருளைக்கிழங்குச்சாறை முகத்தில் தடவி, சிறிது நேரம் சென்றதும் கழுவிக்கொள்ளலாம்.
குங்குமப்பூவுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சக்தி உள்ளது. எனவே குங்குமப்பூ தைலத்தை சில சொட்டுகள் முகத்தில் தடவி, அரை மணி நேரம் கழித்து, வெதுவெதுப்பானநீரில் கழுவலாம்.
இள நீரும் சருமத்தின் வண்ணத்தை மேம்படுத்தும். தினமும் 2 டீஸ்பூன் முகத்தில் தடவலாம்.
பப்பாளி, கேரட், ஆரஞ்சு போன்றவற்றின் சதைப் பகுதியை முகத்தில் தடவினால், முகம்பளிச்சென்று இருக்கும்.