Connect with us

Health Tips in Tamil, Tamil Health Tips

வசீகரமாக முகம் மாறனுமா..? இதோ உங்களுக்கான டிப்ஸ்..!

மருத்துவ குறிப்புகள்

வசீகரமாக முகம் மாறனுமா..? இதோ உங்களுக்கான டிப்ஸ்..!

வசீகரமான முகத்தை எப்படி பெறுவது என்று இந்த கட்டுரையில் நாம் தெளிவாக பார்க்கலாம்.

ஆண்கள் பெரும்பாலும் அழகு தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்த மாட்டார்கள் என்று பொதுசமூகத்தில் ஒரு கூற்று இருக்கிறது. ஆனால், பெண்களை விட, ஆண்கள் தான் அந்த விஷயத்தில் அதிகமாக ஆர்வம் காட்டுவார்கள்.

இன்னும் சொல்லப்போனால், துணையை மயக்கும் யுக்தியை அனைத்து உயிர்களிடத்திலும், ஆணினம் தான் செய்யும். மயிலுக்கு தோகை, சேவலுக்கு கொண்டை என சொல்லிக்கொண்டே போகலாம்.

சரி விஷயத்திற்கு வருவோம். ஆண்களுக்கு வசீகரமான தோற்றத்தை கொண்டு வரும் சில டிப்ஸ்கள் பற்றி தற்போது பார்க்கலாம்.

முட்டை வெள்ளைப் பகுதி:-

முட்டையின் வெள்ளைப் பகுதியை மட்டும் தனியாக எடுத்து, அதனை முகத்தில் அப்ளை செய்யுங்கள்.

குறைந்தது, 15 நிமிடங்கள் காய விட்டு, பிறகு தண்ணீரில் கழுவி விடுங்கள். முட்டையின் வெள்ளைக் கரு, முகத்தை இருக்கமடைய செய்வதால், வசீகரமான முகத்தோற்றம் கிடைக்கும்.

வறண்ட சருமம்:-

பெரும்பாலான ஆண்கள் வறண்ட சருமத்தால் தான் பாதிக்கப்படுவார்கள். ஆண்களின் முகம், இயற்கையாகவே, வறண்ட தன்மைக்கொண்டதாக தான் இருக்கும்.

இதனை சரிப்படுத்த, முட்டையின் வெள்ளைப் பகுதியில், தேன் ஒரு ஸ்பூனை போட்டு கலக்கிக்கொள்ளுங்கள். இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்துக்கொள்ளுங்கள். பிறகு தண்ணீரில் கழுவி விடுங்கள். இவ்வாறு செய்தால், வறண்ட சருமம் சரியாகி விடும்.

எண்ணெய் வடிவதை தடுக்க:-

முல்தானி முட்டி மற்றும் முட்டையின் வெள்ளைப் பகுதியை சேர்த்து, முகத்தில் தடவுங்கள். இவ்வாறு செய்தவன் மூலம், முகத்தில் எண்ணெய் வடியும் பிரச்சனை சரியாகிவிடும்.

இரவு நேரத்தில் கண்டிப்பாக தண்ணீரில் முகம் கழுவ வேண்டும் ஏன்?

பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி சருமப்பராமரிப்பிற்கு மிகவும் முக்கியத்துவம் அளிப்பார்கள். முகத்தை தண்ணீரில் கழுவுவது மிகவும் சிறந்தது. அடிக்கடி முகத்தை தண்ணீரில் மட்டும் கழுவுவது நல்ல மாற்றத்தை தரும்.

ஒரு சிலர் காலை எழுந்ததும் தண்ணீரில் முகத்தை கழுவுவார்கள். ஆனால், அதோடு கழுவுவது கிடையாது. இருப்பதிலேயே இரவில் தூங்குவதற்கு முன்பு முகத்தை தண்ணீரில் கழுவினால் நல்ல மாற்றம் தெரியும். இப்படி செய்வதால் என்னென்ன பயன்கள் ஏற்படும் என்று விரிவாக பார்க்கலாம்.

நாம் காலை வெளியே பணிக்கு சென்றுவிட்டு, இரவு தான் வீட்டிற்கு வருவோம். அப்போது நம் முகத்தில் அதிகப்படியாக மாசுகள் படிவது தவிர்க்க முடியாத விஷயம்.

இந்த மாசுகள் நமது, முகத்தில் இருக்கும் துளைகளை மறைத்துவிடும். இதனால், உடலில் இருக்கும் நச்சுகள் வெளியேற முடியாமல் முகத்திலேயே தங்கி பொழிவில்லாமல் செய்துவிடும். இதனால் தூங்குவதற்கு முன்பு முகத்தை வெறும் தண்ணீரில் கழுவுவது சிறந்தது ஆகும்.

வாழைப்பழம் இருக்கா..? உங்க முகம் கண்டிப்பா ஜொலிக்கும்

பெண்கள், ஆண்கள் என அனைவரும் சரும பராமரிப்பில் அதிக அக்கறைக் கொண்டவர்கள் தான். இதற்கு பேருதவியாக பழங்கள் இருக்கின்றன.

அவற்றை சரியான அளவில், தினமும் எடுத்து வந்தால் சருமம் தங்கமாக ஜொலிக்கும். சரி தற்போது வாழைப்பழத்தை எவ்வாறு நாம் பேஸ் பேக்காக பயன்படுத்தி முகத்தை பராமரிக்கலாம் என்பதை பார்ப்போம்.

நான்கு பழுத்த வாழைப்பங்கள், தேன் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள். அவற்றை முகத்தில், 15 நிமிடம் ஊற வைத்துவிட்டு, பிறகு குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இவ்வாறு செய்து வந்தால், முகம் ஜொலிக்கும்.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in மருத்துவ குறிப்புகள்

Advertisement
Advertisement
To Top