நண்டு பிரியாணி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்
நண்டு – 400 கிராம்
தக்காளி – 2
பாசுமதி அரிசி – 300 கிராம்
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 5
இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்
புதினா, கொத்தமல்லி, உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
தேங்காய் பால் – கால் கப்
தயிர் – 4 ஸ்பூன்
கரம் மசாலா – 1/2 ஸ்பூன்
பட்டை – 2
ஏலக்காய் – 5
அன்னாசிப்பூ – 2
மல்லித் தூள் – 1 ஸ்பூன்
எலுமிச்சை – 1
எண்ணெய் மற்றும் நெய் – தேவையான அளவு
செய்முறை
நண்டை நன்றாக சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். தக்காளி, வெங்காயம் மற்றும் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி உதிரியாக வேக வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய், ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி சூடான பிறகு ஏலக்காய், அன்னாசிப் பூ, கல்பாசி பட்டை சேர்த்து நன்கு தாளித்துக் கொள்ளவும். அதன் பிறகு வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். அதன் பிறகு பொடியாக நறுக்கி வைத்த தக்காளி, புதினா, பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
பிறகு தயிர், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம்மசாலா போட்டு கிளறவும். அதனுடன் சுத்தம் செய்து வைத்த நண்டை சேர்த்து கிளறி போதுமான அளவு தேங்காய்ப்பால் ஊற்றி அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து 10 நிமிடங்கள் வரை நன்றாக வேகவைக்க விடவும்.
நண்டு நன்றாக வெந்த பிறகு தயார் செய்து வைத்துள்ள சாதத்துடன் மசாலா கலவையை சேர்த்து கிளறி 15 நிமிடங்கள் வரை தம் கட்டி இறக்கவேண்டும். அவ்வளவுதான் சுவையான நண்டு பிரியாணி இப்போது தயார்.