கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த ஆண்டு மார்ச் 23-ந் தேதி முதல் உள்நாட்டு, சர்வதேச பயணிகள் விமான சேவைகள் தடை செய்யப்பட்டது.
கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் கட்டுப்பாடுகளுடன் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது. ஆனால் இன்னும் ஆனால், வழக்கமான சர்வதேச விமான சேவை தொடங்கப்படவில்லை.
தற்போது இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகம் உள்ளதால் சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
Advertisement
அரசால் அனுமதிக்கப்பட்ட விமானங்கள் மற்றும் சர்வதேச சரக்கு மானங்களுக்கு மட்டும் தடை இல்லை என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.