செல்வத்தின் அதிபதியாக கருதப்படும் குபேர பகவானை வியாழக்கிழமைகளில் வழிபடுவது இரட்டிப்பு பலன் தரும் என நம்பப்படுகிறது. மகாலட்சுமி அருளுடன் குபேரரின் கிருபையும் சேரும். ஒவ்வொரு வியாழக்கிழமையும் இந்த வழிபாட்டை செய்து வந்தால், குபேரரின் அருளால் வீட்டில் செழிப்பு நிரம்பி விளங்கும்.
குபேர வழிபாடு எப்படி செய்வது?
- வியாழக்கிழமை அதிகாலை எழுந்து, நீராடி வீடு சுத்தம் செய்யவும்.
- வாசலில் பச்சரிசி மாவால் கோலம் போடவும்.
- நிலைவாசலில் சந்தனம், மஞ்சள், குங்குமம் வைத்து அலங்கரிக்கவும்.
- பூஜை அறையில் குபேரரின் படத்தை வைத்து, தாமரை மலர், சங்கு, விளக்கு வைத்து பூஜிக்கவும்.
- நெல்லிக்கனி, அவல், பால், சர்க்கரை வைத்து நைவேத்யமாக படைக்கவும்.
- குபேரர் விரும்பும் உணவு அவல் என்பதால் அவசியம் சேர்க்கவும்.
குபேர விளக்கு எவ்வாறு ஏற்ற வேண்டும்?
- வியாழக்கிழமை மாலை 5 முதல் 8 மணி வரை.
- ஒரு தட்டில் மஞ்சள், குங்குமம், பச்சரிசி, ஐந்து ரூபாய் நாணயம் வைத்து அதில் நெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு பச்சை நிற திரி (அல்லது பஞ்சு திரி) வைத்து வடக்கு திசை நோக்கி குபேர விளக்கு ஏற்றவும்.
- விளக்கின் சுற்றிலும் ஐந்து கற்கண்டு, வாசனை மலர்கள் வைக்கவும்.
- நிலைவாசலிலும் வடக்கு நோக்கி ஒரு விளக்கு ஏற்ற வேண்டும்.
பலன்கள்:
- பணவரவு அதிகரிக்கும்.
- கடன் பிரச்சனைகள் தீரும்.
- தொழில் வளர்ச்சி பெறும்.
- குடும்ப மகிழ்ச்சி, நோய் நொடியிலிருந்து விடுபடலாம்.
- செல்வம் தங்கியிருக்க வழிவகுக்கும்.