TamilXP
  • HOME
  • மருத்துவம்
    • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
    • பழங்களின் பெயர்கள் பட்டியல்
    • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
    • தெரிந்து கொள்வோம்
  • ஆன்மிகம்
    • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
    • 108 வைணவத் திருத்தலங்கள் (திவ்யதேசங்கள்)
No Result
View All Result
TamilXP
  • HOME
  • மருத்துவம்
    • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
    • பழங்களின் பெயர்கள் பட்டியல்
    • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
    • தெரிந்து கொள்வோம்
  • ஆன்மிகம்
    • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
    • 108 வைணவத் திருத்தலங்கள் (திவ்யதேசங்கள்)
No Result
View All Result
TamilXP
No Result
View All Result

திருச்சி உத்தமர் கோவில் வரலாறு

by Tamilxp
March 9, 2025
in ஆன்மிகம்
A A
திருச்சி உத்தமர் கோவில் வரலாறு
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter
ஊர்உத்தமர்கோவில்
மாவட்டம்திருச்சிராப்பள்ளி
மாநிலம்தமிழ்நாடு
மூலவர்புருஷோத்தமன்
தாயார்பூர்ணவல்லி அம்பாள், சௌந்தர்யா பார்வதி
தலவிருட்சம்கதலி-வாழை மரம்
தீர்த்தம்கதம்ப தீர்த்தம்
சிறப்பு திருவிழாக்கள்சித்திரையில் பெருமாளுக்கும், வைகாசியில் சிவனுக்கும் தேர்த் திருவிழா
திறக்கும் நேரம்காலை 6:00 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 4:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை

கோயில் வரலாறு

சிவனை போலவே ஐந்து தலை கொண்ட பிரம்மாவை கண்ட பார்வதி தேவி, அவரை தனது கணவர் என்று எண்ணி பணிவிடை செய்தார். இதை கண்ட சிவன் குழப்பம் வராமல் இருக்க பிரம்மாவின் ஒரு தலையை மட்டும் கிள்ளி எடுத்தார். இதனால் சிவனுக்கு பிரமஹத்தி தோஷம் உண்டாயிற்று.

இதையும் படிங்க

varaha swamy temple

சொந்த வீடு வாங்க அருள் புரியும் வராக சுவாமி கோயில்

April 25, 2025
திரிசங்கு சொர்க்கம் என்றால் என்ன?

திரிசங்கு சொர்க்கம் என்றால் என்ன?

April 25, 2025
குபேரனை இப்படி வழிபட்டால் வீட்டில் செல்வம் பெருகிக் கொண்டே இருக்கும்

குபேரனை இப்படி வழிபட்டால் வீட்டில் செல்வம் பெருகிக் கொண்டே இருக்கும்

April 20, 2025

பிரம்மாவின் கபாளம் அவரது கையுடன் ஒட்டிக்கொண்டது. சிவன் மீண்டும் மீண்டும் முயற்சித்தும் கபாளத்தை பிரிக்க முடியவில்லை. சிவனுக்கு படைக்கப் பட்ட உணவுகள் அனைத்தையும் கபாளமே எடுத்துக் கொண்டது. எவ்வளவு உணவு அருந்தினாலும் கபாளம் நிறையவே இல்லை.

பசியில் வாடிய சிவன்,கபாளத்தை பிச்சை பாத்திரமாக ஏந்திக்கொண்டு பிச்சாடனார் வேடத்தில் பூலோகம் வந்து எண்ணற்ற ஸ்தலங்களுக்கு சென்றார். அவர் இத்தலத்திற்கு வந்த பொது பெருமாள் சிவனின் பாத்திரத்தில் பிச்சை இடவே அது முழுவதுமாக நிரம்பி சிவனின் பசி நீங்கியது .இதனால் தாயார் பூரணவல்லி என்ற பெயரும் பெற்றார். மஹாவிஷ்ணு பள்ளிகொண்ட கோலத்தில் சிவனுக்கு காட்சி கொடுத்தார்.

மும்மூர்த்திகள் ஸ்தலம்

பெருமாள் கிழக்கு பார்த்தபடி பள்ளி கொண்ட கோலத்தில் உற்சவர் பிரயோக சக்கரத்துடன் நின்றபடி உத்யோக விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். பூரணவல்லி தாயார் தனிச்சன்னதியில் அருள்கிறார். அருகில் மகாலட்சுமி சன்னதி உள்ளது. இவ்விரண்டு தாயாரின் தரிசனம் சிறப்பு பலன்களைத் தரக்கூடியது .விஷ்னுவுக்கு நேர் பின்புறம் சிவன் மேற்கு பார்த்தபடி லிங்க வடிவில் இருக்கிறார் . இவர் பிச்சாடனாராக கோஷ்டத்திலும், உற்சவராகவும் உள்ளார்.

சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூம்முர்த்திகளும் தனி தனி சன்னதியில் அம்பாள்களுடன் காட்சி தருகின்றனர் .ஒரே ஸ்தலத்தில் மூம்மூர்த்திகளையும் தரிசிப்பது அபூர்வம். கார்த்திகை தீபதிருவிழாவின் போது மூவருக்கும் மூன்று திசைகளில் சொக்கப்பானை கொளுத்த பட்டு மும்மூர்த்திகள் ஒன்றாக உலா வருகின்றனர்.

தைப்பூசத்தன்று சிவனுக்கும்,மாசிமகத்தில் பெருமாளுக்கும் கொள்ளிடத்தில் தீர்த்தவாரி விழா நடைபெறுகிறது. இங்கு சப்தகுரு அருள் பாலிக்கின்றார். குரு பெயர்ச்சியின் போது விசேஷ அபிஷேகங்கள் நடை பெறுகிறது. எனவே இத்தலம் சப்த குரு ஸ்தலம் என்று அழைக்கபடுகிறது.

பிரம்மா சன்னதி

படைக்கும் தொழிலான பிரம்மாவிற்கு பூலோகத்தில் நமக்கென தனி கோவில் இல்லை என்பது மனகுறை இருந்தது. ஆகவே மஹாவிஷ்ணு பூலோகத்தில் பிறக்கும் படி செய்தார் பிரம்மா. இத்தலத்தில் பெருமானை வணங்கி தவம் செய்து வந்தார். அவரது பக்தியை சோதிப்பதற்காக பெருமாள் கதம்ப மரத்தின் வடிவில் நின்று கொண்டார்.

இதையறிந்த பிரம்மா கதம்ப மரத்திற்கு பூஜைகள் செய்து வணங்கினார். அவரது பக்தியில் மகிழிந்த பெருமாள் காட்சி தந்து நீ எப்போதும் இங்கேயே இருந்து என்னை வழிபட்டு வா. நீ பெற்ற சாபத்தால் கோவில்கள் இல்லாவிட்டாலும் இங்கு தனி வழிபாடு இருக்கும் என்றார். பிற்காலத்தில் இவருக்கு சன்னதி கட்டப்பட்டது. பிரம்மாவிற்கு இடப்புறத்தில் சரஸ்வதி தெற்கு நோக்கி படி இருக்கிறார். இவள் கைகளில் வீணை இல்லாமல் ஓலைச்சுவடி ஜெபமாலையுடன் காட்சி தருவது தனி சிறப்பு.

ShareTweetSend
Previous Post

நின்று கொண்டே சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்

Next Post

வெங்காயத்தாளில் உள்ள மருத்துவ குணங்கள்

Next Post
வெங்காயத்தாளில் உள்ள மருத்துவ குணங்கள்

வெங்காயத்தாளில் உள்ள மருத்துவ குணங்கள்

வெயில் காலத்தில் சருமத்தை பாதுகாக்க சில டிப்ஸ்
மருத்துவ குறிப்புகள்

வெயில் காலத்தில் சருமத்தை பாதுகாக்க சில டிப்ஸ்

மாலை குளியலால் நாள் முழுவதும் ஏற்பட்ட...

by Tamilxp
May 13, 2025
Is it Safe to Eat Pani Puri During Pregnancy
லைஃப்ஸ்டைல்

கர்ப்ப காலத்தில் பானிபூரி சாப்பிடலாமா? – முக்கிய தகவல்கள்!

கர்ப்ப காலம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும்...

by Tamilxp
May 12, 2025
kathu aluku in tamil
மருத்துவ குறிப்புகள்

காது அழுக்கை வைத்து நோய்களை கண்டுபிடிக்க முடியுமா?

நீங்கள் எப்போதாவது காதில் இருக்கும் அழுக்கைப்...

by Tamilxp
May 12, 2025
அதிகநேரம் ஏசியிலே இருப்பிங்களா? – முடி கொட்டுமாம், தெரியுமா?
லைஃப்ஸ்டைல்

அதிகநேரம் ஏசியிலே இருப்பிங்களா? – முடி கொட்டுமாம், தெரியுமா?

தமிழ்நாட்டின் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது....

by Tamilxp
May 5, 2025
Load More
  • மருத்துவ குறிப்புகள்
  • ஆன்மிகம்
  • தெரிந்து கொள்வோம்
  • லைஃப்ஸ்டைல்
  • அழகு குறிப்புகள்

© 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • HOME
  • மருத்துவம்
    • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
    • பழங்களின் பெயர்கள் பட்டியல்
    • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
    • தெரிந்து கொள்வோம்
  • ஆன்மிகம்
    • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
    • 108 வைணவத் திருத்தலங்கள் (திவ்யதேசங்கள்)

© 2025 Bulit by Texon Solutions.