Search
Search

சூர்யா கைவிட, அருண் விஜய் கையிலெடுத்த “வணங்கான்”.. சுவாரசிய அப்டேட் இதோ!

நந்தா மற்றும் பிதாமகன் ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த பிறகு மூன்றாவது முறையாக பாலா மற்றும் நடிகர் சூர்யா இணைந்த திரைப்படம் தான் வணங்கான். கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் 28ம் தேதி சூர்யா தான் மீண்டும் பாலா இயக்கத்தில் நடிக்க உள்ளதாக அறிவித்தார்.

இந்த படத்தின் First Look போஸ்டர் ஒன்றும் வெளியாக, இந்த வணங்கான் படத்தை தனது 2D நிறுவனம் தயாரித்து வெளியிடும் என்றும் அவர் கூறினார். இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க தயாராகி வந்தார், மேலும் கீர்த்தி செட்டி இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

இந்த படத்தை மூன்று மாதங்களுக்குள் முடிக்க படப்பிடிப்பு பணிகள் முழுவீச்சில் நடக்க, இடையில் இயக்குநர் பாலாவிற்கும், நாயகனுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த திரைப்படம் பாதியில் நிறுத்தப்பட்டது.

வணங்கான் படம் கைவிடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது, இந்த நிலையில் தான் கடந்த மார்ச் 2023ல் அருண் விஜய், சூர்யாவின் கதாபாத்திரத்தை ஏற்று இந்த படத்தை தொடர்ந்து நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.

பாலாவின் சொந்த தயாரிப்பில் இந்த படம் தற்பொழுது உருவாகி வரும் நிலையில், ரோஷினி பிரகாஷ் தற்பொழுது கீர்த்தி செட்டிக்கு மாறுதலாக நடித்து வருகிறார். தற்பொழுது சென்னை மகாபலிபுரத்தில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும், சூர்யாக்காக எழுதப்பட்ட கதையில் எந்தவித மாற்றங்களும் இல்லை என்றும், குறித்த தேதியில் படம் முடிக்கப்பட்டு இந்த வருட இறுதிக்குள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

You May Also Like