தமிழகத்தில் நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கில் வைரஸ் பாதிப்பு அதிகரித்த வன்னம் உள்ளது. அவ்வாறு தமிழக்த்தில் தற்போதயை நிலவரப்படி 23,495 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 2351 ஆகும். கிட்டதட்ட 10% பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ள நிலையில், இதில் சுமார் 105 பேர் இறந்துள்ளனர். இதை மற்ற வயதினருடன் ஒப்பிட்டால் 21 முதல் 40 வரை உள்ளவர்கள் 15 பேரும், 41 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 77 பேரும் இறந்துள்ளனர்.
அதாவது 60 வயதுக்கு மேல் உள்ளவர்களில் சுமார் 100 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் 5 பேர் வரை உயிரிழக்க நேரிடுகிறது. இந்த இறப்பு விகிதம் மற்ற வயதினருடன் ஒப்பிடுகையில் அதிக சதவீதமாக இருப்பதால், வாயதானவர்கள் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

பெரும்பாலும் 60 வயதை மேற்பட்டவர்களுக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்ற நோய்கள் இருப்பதால் வைரஸ் அவர்களை அதிக அளவில் பாதிப்பதாக மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
எனவே உங்கள் வீட்டில் 60 வயதை கடந்தவர்கள் இருந்தால் அவர்களை அதிக அக்கறையுடன் பார்த்து கொள்ளுங்கள். மேலும், அரசு அறிவித்துள்ள வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்து பாதுகாப்பாக இருங்கள்.