காண்டவவனத்தை எரிக்க அர்ஜுனன் முயற்சிக்கும்போது, அவனுடன் கண்ணனும் இருந்தார். இந்த செயலுக்கு எதிராக தேவலோகத்தின் அரசன் இந்திரன், இடி, மழை, மின்னல் போன்ற இயற்கை சக்திகளை அனுப்பி அர்ஜுனனைத் தடுக்க முயன்றார். ஆனாலும், அவற்றைத் தாண்டி அர்ஜுனன் வெற்றி பெற்றார்.
அர்ஜுனனுக்குப் பத்துப் பெயர்கள் உள்ளன:
- தனஞ்ஜயன்
- விஜயன்
- சுவேதவாகனன்
- கிரீடி
- பீபத்சு
- சவ்யசாசி
- அர்ஜுனன்
- பல்குணன்
- ஜிஷ்ணு
- பார்த்தன்
இடி இடிக்கும் போது இந்த பத்துப் பெயர்களையும் கூறினால் பாதுகாப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையால், மக்கள் “அர்ஜுனன் தலைபத்து” என்று சொல்வதை வழக்கமாக்கினார்கள்.
அர்ஜுனா – ஒரு அறிவியல் விளக்கம்!
ஆனால் இதில் மறைக்கப்பட்டு இருக்கும் ஒரு அறிவியல் காரணம் உங்களுக்குத் தெரியுமா?
இடி இடிக்கும் போது சிலர் செவியில் “ஙொய்ங்” போன்ற ஒலியைக் கேட்டிருப்பீர்கள். இது காது அடைவதைக் குறிக்கிறது. இதிலிருந்து தப்ப ஒரு சிறந்த வழி “அர்ஜுனா” என்று கூறுவது.
ஏன் தெரியுமா?
- “அர்” என்று சொல்வது நம்ம நாக்கை மேல்தாடையைத் தொட்டுவைக்கும் – இதனால் காற்று இயக்கம் தொடங்குகிறது.
- “ஜு” என்றால் வாய் சிறிது குவிந்து, காற்று வெளிப்பட ஆரம்பிக்கிறது.
- “னா” என்றால் வாய் முழுவதும் திறந்து, காற்று வெளியே சென்று செவிக்கு உள்ளே காற்று அழுத்தத்தை சமன்படுத்துகிறது.
இதனால்தான் “அர்ஜுனா” என்ற ஒரு வார்த்தையே காது அடைவதிலிருந்து நம்மை காப்பாற்றும். அதனால்தான் நம்ம முன்னோர்கள், அர்ஜுனா என்ற பெயரையே துணைவனாக அழைத்தார்கள்!