எல்லோருக்கும் பிறர் தன்னை மதிக்க வேண்டும், மரியாதையுடன் நடத்த வேண்டும் என்ற ஆசையும், எண்ணமும் இருக்கும். ஆனால், சில செயல்கள் மற்றும் பழக்கங்கள் மூலம் மட்டுமே பிறரின் மரியாதையை பெற முடியும். இந்தக் கட்டுரையில், பிறரின் மனதில் உயர்ந்த மரியாதையை பெற உதவும் 10 முக்கிய வழிகளை காண்போம்.
1. நேரத்தை மதித்தல்
நீங்கள் ஒரு இடத்திற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வருவீர்கள் என்று சொன்னால், அந்த நேரத்திற்கு சரியாக அல்லது சற்று முன்னதாகவே அங்கு இருக்க வேண்டும். இது பிறருடைய நேரத்தை மதிக்கும் பண்பாகும். நேரத்தை மதிப்பவர்கள் பிறரிடமும் மரியாதை பெறுவார்கள்.
2. குறைவாக பேசுதல், அதிகம் கேட்குதல்
தனக்கே பேச வேண்டும் என்ற எண்ணத்தை விட, பிறர் பேசுவதை பொறுமையாக கேட்க வேண்டும். மற்றவர்களை இடையூறு செய்யாமல், அவர்களின் கருத்துக்களை கவனமாக கேட்கும் போது, அவர்கள் உங்களை மதிப்பார்கள்.
3. சொன்னதைச் செய்தல்
ஒரு காரியத்தை செய்யப்போறேன் என்று சொன்னால் அதை உறுதி செய்து முடிக்க வேண்டும். சொன்னதை நிறைவேற்றாதவர்கள் நம்பிக்கையையும் மரியாதையையும் இழக்க நேரிடும்.
4. பணிவாக இருப்பது
பணிவாக நடந்து கொள்வது அனைவருக்கும் பிடிக்கும். “நான் தான் சரி” என்ற எண்ணத்தில் இருந்து, பிறரை மனதார பாராட்ட வேண்டும். பணிவோடு நடக்கும் மனிதர்கள் சமூகத்தில் உயர்ந்த மரியாதையை பெற்றுக்கொள்கிறார்கள்.
5. தெளிவாக பேசுதல்
பேசும்போது சுருக்கமாகவும் தெளிவாகவும் பேச வேண்டும். தேவையில்லாத விஷயங்களை நீண்ட நேரம் பேசாமல், முக்கியமான கருத்துக்களை மட்டுமே வெளிப்படுத்த வேண்டும்.
6. அனைவரையும் மரியாதையுடன் நடத்துதல்
பதவி, பணம், சமூக அந்தஸ்து ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், அனைவரையும் சமமாகவும் மரியாதையுடன் நடத்த வேண்டும். இது பெரியவர்களிடமும், சாதாரண மக்களிடமும் மரியாதையை பெற உதவும்.
7. உதவி செய்வது
பிறருக்கு எதிர்பாராமல் உதவுவது ஒரு சிறந்த பண்பு. கேட்காமலேயே உதவி செய்யும் மனப்பான்மையால் சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும்.
8. நேர்மையாக நடந்து கொள்வது
எப்போதும் நேர்மையாகவும் உண்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும். யாரும் பார்க்காத நேரத்திலும் மனசாட்சியுடன் செயல்படுவோர் சமூகத்தில் மரியாதை பெறுவார்கள்.
9. நேர்த்தியான உடை அணிதல்
நேர்த்தியான உடை அணிந்து நடப்பது பிறரின் பார்வையில் நல்ல மதிப்பையும், தன்னம்பிக்கையையும் தரும். இது மரியாதையை பெற உதவும்.
10. எளிமையாக இருத்தல்
பணிவோடு சேர்ந்து எளிமையாக நடப்பதும் மிகச்சிறந்த குணமாகும். எளிமையானவர்கள் எளிதில் அணுகப்படுவார்கள் மற்றும் மரியாதையையும் பெறுவார்கள்.