Connect with us

Health Tips in Tamil, Tamil Health Tips

தேங்காய் எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்

மருத்துவ குறிப்புகள்

தேங்காய் எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்

தேங்காய் எண்ணெயில் சிறந்த மருத்துவ குணங்கள் உள்ளது. தேங்காய் சிறந்த உணவு என்பதை கேரள மக்கள் ஆரம்ப முதல் அறிந்து நன்கு பயன்படுத்தி வருகிறார்கள்.

தேங்காய் கலந்த ருசியான உணவுகள் தயாரித்து வருகின்றனர். தேங்காய் எண்ணெய் குழம்பு தாளிக்கவும், உடம்பில் தேய்த்து குளிக்கவும் அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள்.

கேரளா பெண்களின் கூந்தல் கருமையுடன் அழகாக, அதிக நீளமாக வளர்ந்து காணப்படுவதற்கு தேங்காய் எண்ணெய் ஒரு காரணம். தேங்காய் எண்ணெயை சமையலில் சேர்த்தால் உடலில் கொழுப்பு சத்து அதிகமாகி மாரடைப்பு ஏற்படும். என்று பரவலாக ஒரு கருத்து இருந்து வருகிறது. ஆனால் இது தவறான கருத்து. தேங்காய் எண்ணெயால் உடலுக்கு எந்த கெடுதலும் இல்லை என்று தற்போது புதிய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்துள்ளது.

சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், பாமாயில், ஆலிவ் ஆயில் போன்ற எண்ணெய் வகைகளை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய மக்கள் அதிகம் உற்பத்தி செய்து பயன்படுத்தி வருகிறார்கள். தேங்காய் கலந்து தயாரித்த உணவும், தேங்காய் எண்ணெயில் தயாரித்த உணவும் சீக்கிரம் செரிமானம் ஆகும். அதோடு ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் கரைந்துவிடும்.

சூரியகாந்தி, பாமாயில் இவற்றில் சமைத்த உணவுகளில் உள்ள கொலஸ்ட்ரால் உணவில் கரைக்க படாமல் உருளையாக தென்படும். அது ரத்தத்துடன் கலக்கும் போது, ரத்தநாளம் அடைய வாய்ப்புள்ளது. இதனால் இதய நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். தேங்காய் எண்ணெய் சமையலுக்கு பயன்படுத்துவதால் இதய நோய்கள் வராமல் பாதுகாக்கும்.

தேங்காய் எண்ணெய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிட்டு வரும் நபர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

தேங்காய் எண்ணெய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை தொடர்ந்து சாப்பிடு வருவதன் மூலம், வயிறு மற்றும் குடல்களில் ஏற்பட்டும் அல்சர், குடல்களில் தங்கியிருக்கும் நுண்ணுயிரிகள், நச்சுக்கள், மலச்சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in மருத்துவ குறிப்புகள்

Advertisement
Advertisement
To Top