கொரோனா சிகிச்சை தரும் தனியார் மருத்துவமனைகளுக்கு முதல்வர் எச்சரிக்கை
கொரேனாவை தடுக்கும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவ்வாறு, முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தின்கீழ் தனியார் மருத்துவமனைகள் கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு விதித்த உத்தரவுகள் பின்வருமாறு…
- லேசான அறிகுறி மற்றும் அறிகுறி இல்லாதவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கட்டணம்
- அனைத்து வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவுக்கு ஒரு நாளைக்கு 9,000 முதல் 15,000 வரை கட்டணம்
- 25% படுக்கைகள் முதல்வர் காப்பீடு திட்டத்திற்க்காக ஒதுக்க வேண்டும்
- முதல்வரின் காப்பீடு திட்ட பயனாளிகள் தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டாம்.
- நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மேலாக வசூலித்தால் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
- மருத்துவமனைகள் மீது முதல்வரின் காப்பீடு திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.
மேலும் தொடர்புக்கு 1800 425 3993 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த புதிய அறிவிப்பு முதல்வர் காப்பீடு திட்டத்தின்கீழ் ஏற்கனவே பதிவு செய்தவர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.