இந்தியாவில் நிலப்பதிவு சட்டம் 1908-ன் கீழ் அசையா சொத்துகள் தொடர்பான கிரய பத்திரம், உயில், சொத்து உரிமை ஆகியவை பதிவு செய்யப்பட்டு வருகின்றன. 117 ஆண்டு கால பழமையான இந்த சட்டத்திற்கு மாற்றாக மத்திய அரசு புதிய வரைவு மசோதாவை உருவாக்கியுள்ளது.
புதிய மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் என்னவென்றால் பத்திரப்பதிவுக்காக ஆதார் எண் கட்டாயம் அல்ல என்பது தான். பத்திரப்பதிவுக்கு வரும் நபர்கள் விருப்பப்பட்டால் தான் அவர்கள் ஆதார் எண்ணை வழங்க வேண்டும். ஆதார் எண் வழங்க விருப்பமில்லாதவர்களுக்கு, மற்ற வழிமுறைகளின் மூலம் ஆவணங்கள் சரிபார்க்கப்படும்.
ஆதார் எண் இல்லாததற்காக யாருடைய பத்திரமும் பதிவு செய்யப்படாமல் தவிர்க்கப்படக்கூடாது என்றும் மசோதாவில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மசோதா, 117 ஆண்டு பழமையான பதிவு சட்டத்திற்கு மாற்றாக, நவீன தேவைகளுக்கு ஏற்ப பதிவு முறையில் மாற்றங்களை கொண்டுவரும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.