ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஆவணமாகும் பிறப்புச் சான்றிதழ். இது இல்லாமல் கல்வி சேர்க்கை, ஆதார், வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் போன்ற பல அதிகாரப்பூர்வ ஆவணங்களைப் பெற முடியாது. எனவே, இந்த கட்டுரையில் தமிழ்நாட்டில் பிறப்புச் சான்றிதழ் பெறும் முறைகள், தேவையான ஆவணங்கள் மற்றும் ஆன்லைன்/ஆஃப்லைன் விண்ணப்ப வழிகள் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
பிறப்புச் சான்றிதழ் என்றால் என்ன?
ஒரு குழந்தை பிறந்தவுடன், அவரின் பெயர், பிறந்த தேதி, பெற்றோர் விவரம், பிறந்த இடம் போன்ற முக்கிய தகவல்களை பதிவு செய்யும் அரசு ஆவணமே பிறப்புச் சான்றிதழ் ஆகும்.
இதை ஏன் பெற வேண்டும்?
- பள்ளி, கல்லூரி சேர்க்கை
- வாகன ஓட்டுனர் உரிமம்
- ஆதார், பாஸ்போர்ட் போன்ற ID ஆவணங்கள்
- அரசு நலத்திட்டங்கள்
- பாங் கணக்கு, சொத்து உரிமைகள் உள்ளிட்ட முக்கிய தேவைகள்
யார் வழங்குவார்கள்?
பிறப்பு மற்றும் இறப்புப் பதிவாளர்கள், உள்ளூர் நிர்வாகம் (நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி) ஆகியோர் தான் இந்த சான்றிதழ்களை பதிவு செய்து வழங்குவார்கள்.
பிறப்புச் சான்றிதழ் பெறும் முறை:
நேரடியாக அலுவலகத்தில் விண்ணப்பிக்க:
- உள்ளூர் பதிவாளர் அலுவலகத்துக்குச் செல்லவும்
- மருத்துவர் கொடுத்த பிறப்பு உறுதிப்பத்திரம் பெறவும்
- விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும் –
- குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், முகவரி, பிறந்த இடம், தேதி
- ஆதார் நகல், மருத்துவ அறிக்கை, முகவரி ஆதாரம் (குடும்ப அட்டை/ஓட்டுநர் உரிமம்) இணைக்கவும்
- ரூ.20 கட்டணம் செலுத்தவும்
- பதிவாளர் சரிபார்த்த பிறகு, பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்
குழந்தை பிறந்த 21 நாள்களுக்குள் விண்ணப்பிக்கவேண்டும். பிறகு விண்ணப்பித்தால் கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க:
- தமிழ்நாடு பிறப்பு பதிவு இணையதளம் சென்று திறக்கவும்
- “Birth Certificate” என்பதைக் கிளிக் செய்யவும்
- உங்கள் மின்னஞ்சல், மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்யவும்
- மாவட்டம், நகரம்/பஞ்சாயத்து தேர்வு செய்யவும்
- குழந்தையின் பிறந்த தேதி, பெயர், பாலினம், பெற்றோர் பெயர்கள் உள்ளிட்ட தகவல்களை உள்ளிடவும்
- மருத்துமனை அல்லது வீட்டு முகவரி, தாயின் வயது, கல்வி, தொழில் உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் உள்ளிட்ட பிற தகவல்களும் நிரப்பவும்
- ஆதார் நகல் போன்ற ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்கவும்
பிறப்புச் சான்றிதழ் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும். அதனை அச்சு எடுத்துக்கொள்ளலாம்.
விண்ணப்ப நிலையை எப்படி பார்ப்பது?
- உங்களது மின்னஞ்சல் / மொபைல் எண்ணுடன் மீண்டும் இணையதளத்தில் உள்நுழையவும்
- பெறப்பட்ட Request Number-ஐ உள்ளிட்டு நிலையை காணலாம்
- சான்றிதழ் தயாரானதும் SMS மற்றும் மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்படும்
பெயர் சேர்க்க அவகாசம் உள்ளதா?
ஆம். பிறந்த 15 ஆண்டுகளுக்குள் குழந்தையின் பெயரை பிறப்புச் சான்றிதழில் சேர்க்கலாம். இது இந்திய அரசின் சட்டப்படி (Rule 10, Births & Deaths Act 1969) அனுமதிக்கப்பட்டுள்ளது.
முக்கிய குறிப்புகள்:
- குழந்தை பிறந்த 21 நாட்களில் விண்ணப்பிப்பது சிறந்தது
- நேரில் மற்றும் ஆன்லைன் இரண்டு வழிகளிலும் விண்ணப்பிக்கலாம்
- தற்காலிக சான்றிதழும் அதிகாரபூர்வமாக பயன்படுத்தக்கூடியது
- பிறப்புச் சான்றிதழ் இல்லாமல் பல சேவைகள் பெற முடியாது