Connect with us

Health Tips in Tamil, Tamil Health Tips

பாலின் வகைகளும் அவற்றின் நன்மைகளும்

மருத்துவ குறிப்புகள்

பாலின் வகைகளும் அவற்றின் நன்மைகளும்

உலக அளவில் பால் உற்பத்தி செய்வதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. பால் என்பது உடலுக்கு அதிக நன்மைகளை தரக்கூடிய ஒன்று. உடலுக்கு அதிக கேல்சியம் சத்துக்களை தருவதன் மூலம், எலும்புகள் நன்கு வலுப்பெறும். தசைகள் நன்கு வளர்ச்சி அடையும்.

ஆட்டுப்பால்

பசும் பாலில் இருப்பதை விட கொழுப்பு, புரதம், இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் அதிகமாக ஆட்டுப் பாலில் உள்ளது. இது நோயாளிகளுக்கு மிக எளிதில் செரிக்கக் கூடியது. காசநோய், வரட்டு இருமல், வயிற்றுக் கடுப்பு, குடல் வாதம், பக்க வாத நோய்களுக்கு ஆட்டுப்பால் நல்ல மருந்து. ஆட்டுப்பால் பசியின்மையை போக்கும். 200 மிலி ஆட்டுப்பாலில் சுமார் 6 கிராம் உயர்தர புரோட்டீன் உள்ளது.

பசும்பால்

பசும்பாலில் வைட்டமின் பி12 உள்ளது. பசும்பாலை இரவில் சாப்பிட்டு வர உடல்சூடு, நுரையீரல் சளி, கண்ணெரிச்சல், பித்த கோளாறுகள் ஆகியவை நீங்கும்.

பசும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் நெய், தயிர், மோர் ஆகியவை உடலுக்கு குளிர்ச்சி தருகிறது. இரத்தக் கொதிப்பு கட்டுப்பாட்டிற்கும், உடல் பருமன் குறைவதற்கும், இதய நோயிற்கும், புற்றுநோய், நீரிழிவு நோய் உள்ளவர்களும் பாலை தினமும் எடுத்துக் கொள்ளலாம்.

கழுதைப்பால்

கழுதைப் பால் மருத்துவ குணம் கொண்டது. வெறும் வயிற்றில், ஏழு நாட்கள் தொடர்ந்து குடித்தால் ஜீரண சக்தி, மஞ்சள் காமாலை ஆஸ்துமா நோய்கள் வராது. பிறந்த குழந்தைக்கும் நோயுற்ற குழந்தைகளுக்கும் கழுதை பால் கொடுப்பது நல்லது. இதனால் கரப்பான், சொரி சிரங்கு, நரம்பு கட்டிகள், பித்தம் ஆகிய நோய்கள் தடுக்கப்படுகிறது.

ஒட்டகப்பாலின் நன்மைகள்

வெள்ளாட்டுப்பால்

வெள்ளாட்டுப்பாலில் உள்ள கொழுப்பும் புரதமும் எளிதில் செரிக்கக் கூடிய தன்மையும் உள்ளது. குடற்புண் உள்ள நோயாளிகளுக்கு வெள்ளாட்டுப்பால் எடுத்துக் கொள்ளலாம். மேலும் இது ரத்தப் போக்கை தடுக்கும். தாய்ப்பாலை உருவாக்கும்.

தேங்காய்ப்பால்

சரும நோய்களைத் தீர்க்கும். கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும். வறண்ட சருமத்தை வளமாக்கும். இதில் உள்ள லாரிக் அமிலம் வயிற்றுப்போக்கை தடுக்கும். கல்லீரலை பாதுகாத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். தேங்காய் பாலில் வைட்டமின், தாது உப்புக்கள் உள்ளது. இதில் கொழுப்புச் சத்து அதிகம் உள்ளதால் அளவோடு சாப்பிடுவது நல்லது. குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்ட ஒரு தேங்காயை தவிர்ப்பது நல்லது.

பாலின் தீமைகள்

பாலை அதிகமாக குடித்தால், அது எலும்பு முறிவுகளுக்கு வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது. அதாவது, சிறிய விபத்துகள் ஏற்பட்டாலே, உடல் எலும்புகள்; முறிந்துவிடுமாம்.

தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில், பால் அதிகமாக குடிப்பவர்கள் விரைவில் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரியவந்துள்ளது. அதாவது அந்த ஆய்வில் ஒரு நாளைக்கு மூன்று கிளாஸ் தினமும் குடித்தால் இறப்பின் ஆபத்து இரண்டு மடங்கு அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பெண்களுக்கு இந்த ஆபத்தின் அளவு சற்று அதிகம் என்றே கூறப்பட்டுள்ளது.

பால் அதிக அளவில் குடிக்கும் நபர்களுக்கு உடல் சோர்வு, வயிறு மந்தம் ஏற்படுதல், நோய் அழற்சி போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

5 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள், தினமும் 400 மி.லி பால் சாப்பிடுவது நல்லது.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in மருத்துவ குறிப்புகள்

Advertisement
Advertisement
To Top