Search
Search

நடைப்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

nadai payirchi benefits in tamil

நடைப்பயிற்சி என்பது நோயின்றி வாழ மிகவும் முக்கியமான ஒரு செயல்பாடாகும். உடற்பயிற்சி என்பது நகரத்து மக்களிடம் ஒரு நவீன பழக்கமாக மாறி வருகிறது. நிறைய ஆய்வுகளில் தினமும் வாக்கிங் மேற்கொள்வது மிகவும் நல்லது என்று கூறுவதை படித்திருப்பீர்கள்.

நாம் உணவுக்கு அளிக்கும் முக்கியத்துவம் உடற்பயிற்சிக்கு அளிப்பதில்லை. ஆனால் நடைபயிற்சி (walking) என்பது நோயின்றி வாழ மிகவும் முக்கியமான ஒரு செயல்பாடாகும்.

nadai payirchi benefits in tamil

உங்கள் உடலில் செயல்பாடுகள் அதிகரிக்கிறது. உடல் பாகங்களில் ஏற்படும் மந்த நிலையை தவிர்க்கிறது. தசைகள் நேர்த்தியான வடிவம் பெறுகிறது. உடலின் தோற்றப்பொலிவு அதிகரிக்கிறது.

ரத்தத்தில் உள்ள கொழுப்புகள் குறைந்து சர்க்கரையின் அளவு தேவையான அளவு சேகரிக்கப்பட்டு இன்சுலின் சுரக்கப்படுகிறது.

அதிக உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் தினமும் காலையும், மாலையும் ஒரு கிலோ மீட்டர் நடை பயிற்சி மேற்கொண்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும். மற்ற உடற்பயிற்சியை விட நடைபயிற்சி செய்வது மிக எளிது.

நாம் சராசரியாக ஒரு நாளில் 2500 அடி தூரம் நடக்க வேண்டும். ஒரே இடத்தில் அமர்ந்து பணி செய்பவர்கள் கம்ப்யூட்டர் பணி, எழுத்துப்பணி, வாகன ஓட்டுநர்கள் இவர்கள் கண்டிப்பாக நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இதனால் முதுகு பிடிப்பு, முதுகு வலி போன்றவை வராமல் பாதுகாத்து கொள்ள முடியும்.

நாம் நடைபயிற்சி செய்யும் போது உடலில் உள்ள செரோட்டனின் அளவு மாறுபட்டு நம்மை உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. வாரத்திற்கு 5 நாட்கள் அரை மணி நேரம் நடைபயிற்சி மேற்கொண்டால் நான்கு வாரங்களிலேயே மனச்சோர்வை முற்றிலும் அகற்றிவிடும்.

எட்டு வடிவ நடைப்பயிற்சியின் நன்மைகள் என்ன?

எட்டு போன்ற வடிவத்தை பெரிதாக தரையில் வரைந்துவிட்டு, அந்த கோடுகளின் படியே நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இன்னும் விளக்கமாக சொன்னால், பைக்கில் எட்டு போடுவதைப்போன்று, நடந்துக்கொண்டே எட்டு போட வேண்டும். இது தான் எட்டு வடிவ நடைப்பயிற்சி.

8 shape walking in tamil

நன்மைகள்:

1. 70 வயது உடைய நபர்கள் கூட இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால், 50 வயதுடையவர்களாக மாறிவிடுவார்கள்.

2. குளிர்ச்சியான நேரங்களில் வரும் தலைவலி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளையும் இந்த எட்டு வடிவ உடற்பயிற்சி நீக்கிவிடும்.

3. எட்டு வடிவ உடற்பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால், நீரழிவு நோயை இல்லாமலே செய்து விடலாம் என்றும் சில நிபுனர்கள் தெரிவிக்கின்றனர்.

4. கண்பார்வை குறைபாடுகளில் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு நல்ல பயனை இந்த எட்டு வடிவ நடைப்பயிற்சி ஏற்படுத்தி தருமாம்.

சாப்பிட்டதும் நடைபயிற்சி செய்தால் உடல் எடை வேகமாக குறையும்..! எப்படி தெரியுமா..?

சாப்பிட்ட முடித்ததும், நடைபயிற்சியை செய்தால் உடல் எடையை நன்கு குறைக்க முடியும் என்று மருத்துவர்கள் ஆய்வு ஒன்றில் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் சாப்பிட்டு முடித்ததும், யாருக்கு நடக்க பிடிக்கும். கட்டில், மெத்தை போன்றவற்றில் படுத்து குட்டி தூக்கம் போட தானே பிடிக்கும். ஆனால், அந்த தூக்கத்தையும் மீறி எழுந்து நடைபயிற்சியை மேற்கொண்டால், உடல் எடையை குறைக்க முடியுமாம்.

சாப்பிட்ட உடன் நடப்பதால் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகுமாம். கொழுப்பு சேராது. இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காது. இரத்த ஓட்டம் சீராகும். அதேசமயம் உடலில் மெட்டாபாலிசமும் அதிகரிக்கும் என்கின்றனர்.

இந்த நடைப்பயிற்சி என்பது வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு செய்யச் சொன்னால் முடியாது. கட்டுப்பாடான உணவு சாப்பிட்டு, புரதச்சத்து, வைட்டமின்கள் நிறைந்த சம ஊட்டச்சத்தான உணவை சாப்பிட்டால்தால் நடக்க முடியும் என்கிறார்கள். இதனால் ஆரோக்கியமான உடல் எடையை தற்காத்துக்கொள்ள முடியும் என்கின்றனர்.

பின்னோக்கி நடைப்பயிற்சி செய்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

Leave a Reply

You May Also Like