தேவையானவை:
பாசுமதி அரிசி – 2 கப்
பச்சைப் பட்டாணி – அரை கப்
பெரிய வெங்காயம், நாட்டுத் தக்காளி – தலா 2
எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் – 4
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு – 4 பல்
புதினா, கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி அளவு
தேங்காய்த் துருவல் – ஒன்றரை டேபிள்ஸ்பூன்
பட்டை – சிறு துண்டு
லவங்கம், ஏலக்காய் – தலா ஒன்று
எண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
வெங்காயம், மற்றும் தக்காளியை நீளமாக, நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, புதினா, கொத்தமல்லித்தழை, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை லேசாக வதக்கி வைத்துக்கொள்ளுங்கள். பிறகு அதை மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு தாளிக்கவும். பிறகு அதில் வெங்காயம்,பச்சைப்பட்டாணி, உப்பு, தக்காளி போட்டுநன்றாக வதக்கவும். அதோடு அரைத்து வைத்துள்ள மசாலா விழுது, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.
பிறகு மூன்றரை கப் நீர் சேர்த்து கொதிக்கவிடவும். பிறகு, பாசுமதி அரிசியை சேர்த்து குக்கரை மூடி வைக்கவும். ஆவி வந்ததும்
‘வெயிட் போட்டு அடுப்பை ‘சிம்’மில் வைத்து, 10 நிமிடங்கள் கழித்து இறக்கவும்.