இன்றைய இளைஞர்களுக்கு புறம்போக்கு நிலம் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அதுபற்றி கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.
புறம்போக்கு நிலம் என்பது அரசின் சொத்து ஆகும். பொது பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் நிலங்களை புறம்போக்கு நிலம் என்று அழைக்கப்படுகிறது.
புறம்போக்கு என்பது அரசின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள நிலங்களை குறிக்கிறது, எனவே இவை தனியார் ஆக்கிரமிப்புக்கு வெளியில் இருப்பதால் புறம்போக்கு என்று அழைக்கப்படுகிறது.
புறம்போக்கு நிலங்கள் பெரும்பாலும் மாநில அரசு, மத்திய அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பார்வையில் பராமரிக்கப்படும். இவை வருவாய் ஆவணங்களில் பதிவு செய்யப்படாத நிலங்களாக இருந்தாலும், அரசு இது தொடர்பான கட்டுப்பாட்டை செலுத்துகின்றது. அவை, அரசின் சொத்துகளாகவே கணக்கிடப்படுகின்றன.
இந்த நிலங்கள் பல்வேறு வகையான பொதுப் பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, கல்வி நிறுவனங்கள், அரசு பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், மற்றும் ஏழை மக்களுக்கு வீடு கட்டும் திட்டங்களுக்காக புறம்போக்கு நிலங்களை பயன்படுத்தப்படுகின்றன.
குடியிருப்பு பகுதிகளில், 5 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தவர்களுக்கு, அந்தப் புறம்போக்கு நிலத்தில் வீட்டு மனை பட்டா வழங்கும் ஆணை அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஏரி, குளம், கால்வாய், ஓடை, குட்டை போன்ற நீர் நிலைகளையும் புறம்போக்கு நிலம் என்று கூறுகின்றனர். எனவேதான் நீர் நிலைகளை தனியார் ஆக்கிரமிப்பு செய்யக் கூடாது என்று அரசு கூறியுள்ளது.