Search
Search

அருள்மிகு சொன்ன வண்ணம் செய்த பெருமாள் திருக்கோயில்

ஊர் – திருவெக்கா

மாவட்டம் – காஞ்சிபுரம்

மாநிலம் – தமிழ்நாடு

மூலவர் – யதோத்தகாரி பெருமாள் ,சொன்ன வண்ணம் செய்த பெருமாள்

தாயார் – கோமளவல்லி தாயார்

தீர்த்தம் – பொய்கை ,புஷ்கரணி

திருவிழா – வைகுண்ட ஏகாதசி

திறக்கும் நேரம்: காலை 7:00 மணி முதல் 10:00 மணி வரை, மாலை 5:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை.

Sonnavannam Seitha Perumal Temple, Tiruvekkaa
Sonnavannam Seitha Perumal Temple, Tiruvekkaa

தலவரலாறு

பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இது 52வது திவ்ய தேசம். பார்க்கவ மகரிஷியின் மகனாக பிறந்தவர் திருமழிசை ஆழ்வார். இவர் திருமழிசை என்னும் ஊரில் அவதரித்தார்.

பிரம்பறுக்க வந்த திருவாளன் என்பவர் இவரை வளர்த்தார். பிறந்தது முதல் பால் கூட குடிக்காத குழந்தையை கண்ட வேளாளர் தன் மனைவியுடன் பசும்பால் எடுத்துவந்து கொடுத்தார். அந்த நாள் முதல் தொடர்ந்து அவர்கள் கொடுத்த பாலை அருந்தி வளர்ந்தார்.

Sonnavannam Seitha Perumal Temple, Tiruvekkaa
Sonnavannam Seitha Perumal Temple, Tiruvekkaa

ஒருநாள் பாலை மீதம் வைத்து விட்டார் திருமழிசை. அப்போது வேளாளர் தன் மனைவியுடன் மீதமுள்ள பாலை சாப்பிட்டவுடன் முதுமை மாறி இளமை பெற்றனர். பின் இவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது அதற்கு கனிகண்ணன் என பெயரிட்டு ஆழ்வார் உடனே வளர்ந்து, பின் ஆழ்வாரின் சீடரானார்.

ஒரு முறை காஞ்சிபுரம் வந்த திருமழிசை ஆழ்வார், திருவெக்கா தலத்திற்கு வந்த பெருமாளுக்கு பல ஆண்டுகள் சேவை செய்தார். ஆசிரமத்தை சுத்தம் செய்யும் மூதாட்டி தான் இளமையாக இருக்க விரும்பியதால் ஆழ்வார் அவரை இளமையாக்கினார். இவளது அழகை கண்டு மயங்கிய பல்லவ மன்னன், அவளை தன் மனைவி ஆக்கினார்.

காலம் செல்ல செல்ல மன்னர் முதியவரானார், அவரது மனைவி இளமையாகவே இருந்ததால், இதை கண்டு கவலைப்பட்டு தனக்கும் இளமை வேண்டும் என ஆழ்வாரின் சீடரான கனி கண்ணனிடம் வேண்டினர். அதற்கு, கேட்டவர்க்கு எல்லாம் அந்த வரம் தர முடியாது என்றார் சீடர்.

மன்னருக்கு கோபம் வந்து கணிக்கண்ண சீடரை நாடு கடத்தும் படி உத்தரவிட்டார். இதை அறிந்த ஆழ்வார் சீடனுடன் தானும் வெளியேற முடிவு செய்தார். நாங்கள் இல்லாத இடத்தில் உனக்கும் வேலை இல்லை எனவே நீயும் எங்களுடன் வந்துவிடு என பெருமாளிடம் கூறினார்.

Sonnavannam Seitha Perumal Temple, Tiruvekkaa

பெருமாளும் தன் பாம்பு படுக்கையை சுருட்டிக்கொண்டு ஆழ்வாருடன் சென்றார். எனவே தான் சொன்ன வண்ணம் செய்த பெருமாள் என்ற திருநாமம் ஏற்பட்டது.

எல்லா கோயில்களிலும் பெருமாளின் சயன திருக்கோலம் இடமிருந்து வலமாக இருக்கும். ஆனால் திருமழிசை ஆழ்வாருடன் சென்று, மறுபடி வந்து படுத்ததால் இத்தலத்தில் பெருமாள் வலமிருந்து இடமாக சயனித்திருக்கிறார்.

சரஸ்வதிதேவி, வேகவதி ஆறாக மாறி விரைந்து ஓடி வரும்போது அந்த நதியை தடுக்க மூலவரே சயனத்தில் இருப்பதாகக் கூறுவர். வேகவதி ஆறே “வெக்கா’ என அழைக்கப்படுகிறது.

மேலும் அனைத்து 108 திவ்ய தேசங்கள் வைணவத் தலங்களின் வரலாற்றை இங்கு அறிந்து கொள்ளலாம்.

You May Also Like