ஹெல்மேட் போடவில்லை என காரில் சென்றவருக்கு அபராதம் விதித்துள்ள போக்குவரத்து காவல்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் தேன் ராஜா. இவர் ஆக்டிவ் மைன்ட்ஸ் என்ற பெயரில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான காப்பகம் நடத்தி வருகிறார். இவர் அம்பசிட்டர் காரை பயன்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது செல்போனுக்கு சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையில் இருந்து ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில் இவருடைய அம்பசிட்டர் கார் எண்ணை பதிவிட்டு ஹெல்மெட் அணியவில்லை ரூ.1000 அபரதாம் விதித்துள்ளதாகவும் வந்துள்ளது. மேலும் அதில் ஒருவர் பைக் ஓட்டிச்செல்லும் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது.

கோவில்பட்டியில் இருக்கும் தான் சென்னைக்கு சென்றதாக வந்துள்ளது. தான் வைத்திருப்பது கார் என்றும் புகைப்படத்தில் பைக் படம் இடம் பெற்றுள்ளது என அவர் தெரிவித்தார்.
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை உதவி எண்களுக்கு அழைத்தும் எவ்வித சரியான பதிலும் கிடைக்கவில்லை என்பதால் அதிர்ச்சியில் உள்ளார்.