நீங்கள் ஹோட்டலில் ஒரு அறையைப் பயன்படுத்தும் போது, அந்த அறைக்குள் கடிகாரம் இருப்பதைக் கவனித்துள்ளீர்களா? பெரும்பாலான ஹோட்டல் அறைகளில் கடிகாரம் வைக்கப்படுவதில்லை. அதற்கான காரணம் என்ன தெரியுமா?
இன்றைய நவீன காலத்தில் பலரும் ஸ்மார்ட் போன் அல்லது டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்துவதால் நேரத்தை தெரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இது தற்போது மட்டுமல்ல, பல வருடங்களாகவே ஹோட்டல் அறைகளில் கடிகாரம் வைக்கப்படுவது கிடையாது.
இதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று, நேரம் பற்றிய மன அழுத்தம். இத்தகைய அழுத்தத்தைத் தவிர்க்க, சில ஹோட்டல்கள் கடிகாரங்களை வைக்காமல் இருக்கின்றன.
அறையில் நேரம் தெரியாத சூழல் ஏற்படுவதால் அதிக நேரம் ஹோட்டலில் தங்கும் வாய்ப்பு உண்டாகிறது. இது ஹோட்டலுக்கு கூடுதல் வருமானமாக மாறலாம்.
சிலர் கடிகாரத்தின் ‘டிக் டிக்’ சத்தம் தூக்கத்துக்கு இடையூறாக உணரக்கூடும். இந்த சத்தத்தை தவிர்க்க சில ஹோட்டல்கள் கடிகாரங்களை நீக்குகின்றன. கடிகாரம் இல்லாத அறைகள் அழகாகவும் நேர்த்தியாகவும் தோற்றமளிக்கின்றன என்பதும்கூட ஒரு காரணமாக இருக்கிறது.