Connect with us

Health Tips in Tamil, Tamil Health Tips

மூல நோயை விரட்டும் துத்தி இலை

மருத்துவ குறிப்புகள்

மூல நோயை விரட்டும் துத்தி இலை

துத்தி இலை மருத்துவ குணம் நிறைந்த ஒரு மூலிகைப் பொருள். இது இனிப்பு சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. துத்தி இலை, பூ, விதை, வேர், பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டது.

மலக்கட்டு, ஆசனவாய் போன்ற பிரச்சனைகளுக்கு துத்தி இலை சிறந்த மருந்தாக பயன்படுகிறது. துத்தி இலை உடல் சூட்டை தணிக்கும். சிறுநீரை பெருக்கும். காம உணர்ச்சி அதிகரிக்கும்.

Thuthi Ilai Uses in Tamil

மூலச்சூடு

துத்தி இலையை பருப்புடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூலச்சூடு நீங்கும்.

ஆசனவாய் கடுப்பு

துத்தி இலை பொடியை பசும்பாலில் கலந்து நாட்டு சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட ஆசனவாய் கடுப்பு முற்றிலும் குணமாகும்

தொழு நோய்

துத்தி விதைகளைப் பொடி செய்து அதில் கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை கலந்து 200 மில்லி கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் சரும நோய்கள், தொழு நோய் கட்டுப்படுத்தும்.

வெள்ளைப்படுதல்

துத்தி விதையின் பொடியை தண்ணீரில் கலந்து குடித்தால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் நோய் குணமாகும்.

வயிற்றுப் புழு

துத்திக் கீரையை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புழுக்களை நீக்கும். மேலும் வாயு சம்பந்தப்பட்ட வியாதிகளையும் குணமாக்கும்.

படர்தாமரை

துத்தி இலையை அரைத்து படர்தாமரை உள்ள இடத்தில் பூசி வந்தால் படர்தாமரை குணமாகும்.

மூல நோய்

மூல நோயால் அவதிப்படுபவர்கள் துத்திக் கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால் மூல நோய் முற்றிலும் குணமாகும்.

மலச்சிக்கல்

நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளையும் சரியான அளவில் தண்ணீரும் பருகி வந்தால் மலச்சிக்கல் ஏற்படாமல் தவிர்க்க முடியும். மலச்சிக்கல் உள்ள நபர்கள் துத்திக் கீரைகளை நன்கு சுத்தமாகக் கழுவி, அதனுடன் பாசிப்பருப்பு, நெய்சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.

பற்கள், ஈறுகள்

பற்கள் மற்றும் ஈறுகளை சுத்தமாக வைத்துக்கொள்ளாத காரணத்தால், சிலருக்கு ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டு, பல் வலி போன்றவற்றை உண்டாக்குகிறது. இந்தசமயங்களில் துத்தி இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரில் வாய் கொப்பளித்து வந்தால் பல் ஈறுகளில் ஏற்படும் வலி, வீக்கம் இதர நோய்கள் தீரும்.

அஜீரணம், வயிற்று போக்கு

நேரம் தவறி உடலுக்கு ஒவ்வாத உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் அஜீரணம் ஏற்பட்டு வயிற்றுப்போக்கும் ஏற்படுகிறது. இத்தகைய பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் துத்தி இலைகளை அரைத்து சாறாக குடிந்து வந்தால், அஜீரணத்தால் ஏற்பட்ட வயிற்றுப் போக்கு குணமாகும்.

சிறுநீர் பிரச்சனை

ஒவ்வொரு மனிதனும் ஒரு நாளில் சரியான இடைவெளியில் சிறுநீர் நன்றாக கழிப்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஒரு சிலர் தண்ணீர் குறைவாக குடிப்பதாலும், சரியான நேரத்தில் சிறுநீர் கழிக்காததாலும், எதிர்காலத்தில் சிறுநீர் பிரச்சனை ஏற்படுகிறது. இது போன்ற பிரச்சனை வராமல் இருக்க துத்தியிலையை இரசம் செய்து அருந்தி வந்தால், சிறுநீரக பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in மருத்துவ குறிப்புகள்

Advertisement
Advertisement
To Top