பாம்பு கடி என்பது அவசர மருத்துவ நிலை. ஆனால் இந்தியாவில் பெரும்பாலான பாம்புகள் நஞ்சற்றவை என்பதைக் கேள்விப்பட்டால் நீங்கள் அதிர்ச்சி அடையலாம். இக்கட்டுரையில், பாம்பு கடித்தவுடன் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது, என அனைத்தையும் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
பாம்பு கடிக்கும்போது செய்ய வேண்டிய முதல் நடவடிக்கை
முதலில் பதற்றம் தவிர்க்க வேண்டும்.
மனித மனதில் உருவாகும் பயம், நஞ்சை உடலில் விரைவாக பரவச் செய்யும் என்பதால்
அமைதியாக இருத்தல் மிகவும் அவசியம்.
- இந்தியாவில் நிகழும் பாம்புக்கடி சம்பவங்களில் 95% வரை நஞ்சற்ற பாம்புகளால் ஏற்படுகின்றன.
- வெறும் 5% மட்டுமே நச்சுப் பாம்புகளால் ஏற்படும்.
பயப்பட வேண்டிய அவசியமில்லை. ஆனால், மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியது கட்டாயம்.
மருத்துவமனை செல்ல வேண்டிய அவசர நேரம்
30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரத்திற்குள் மருத்துவ உதவியை பெறுவது உயிரைக் காப்பாற்றும் வழி.
நாகம் போன்ற நச்சுப் பாம்புகளால் கடிக்கப்பட்டால், உடனடியாக நஞ்சு பரவக்கூடியதால், மிக விரைவாக மருத்துவ உதவி பெற வேண்டும்.
பாம்பு கடிக்கும்போது செய்யக்கூடாதவை
- கடித்த இடத்தில் ரப்பர் பைடு, கயிறு கட்ட வேண்டாம்.
இது ரத்த ஓட்டத்தை தடுக்கும் நிலையில் நஞ்சு ஒரே பகுதியில் சேர்ந்து ஆபத்தை உருவாக்கும். - அணிந்துள்ள ஆபரணங்களை (வளையல், மோதிரம், மெட்டி) உடனே அகற்ற வேண்டும்.
வீக்கம் ஏற்பட்டால் அவை மேலதிக பாதிப்புகளை ஏற்படுத்தும். - நஞ்சை சப்பி வெளியேற்ற முயல வேண்டாம்.
இது நஞ்சை மற்ற இடத்திற்கே பரப்பும் அபாயத்தை ஏற்படுத்தும்.
மருத்துவமனை செல்லும் வரை கவனிக்க வேண்டியவை
- நபரை முடிந்தவரை அடக்கமாக வைத்து, நடக்கவிடாமல் செய்யுங்கள்.
அதிக இயக்கம் நஞ்சு பரவுவதைத் தூண்டும். - கடித்த நேரத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இது மருத்துவர்களுக்குத் தேவையான முக்கியமான தகவல். - பாம்பின் விவரங்களை (நிறம், வடிவம்) தெரிந்தால் சொல்லுங்கள்.
இது தடுப்புமருந்தை (anti-venom) தேர்வு செய்ய உதவும்.
பாம்பு கடிக்க காரணமாகும் சூழ்நிலைகள்
- அதிகமாக புல்வெளியில் நடமாடுதல்
- காலில் செருப்புகள் அணியாமை
- இரவில் வெளிச்சமின்றி நடமாடுதல்
முக்கியமான தகவல்
பாம்பு கடிக்கும்போது 90% பேரை காப்பாற்ற முடியும் – சிரமம் ஏற்படுவது தாமதமான மருத்துவ உதவியால் மட்டுமே.
இந்த கட்டுரை மருத்துவ ஆலோசனையல்ல. உடனடி மருத்துவ உதவி பெற வேண்டும். மேலே கூறியவை பொதுவான தகவல்களாகும். உங்கள் உடல்நிலை குறித்த சந்தேகங்களுக்கு மருத்துவரை அணுகுங்கள்.