Connect with us

TamilXP

வெங்காய தேநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

மருத்துவ குறிப்புகள்

வெங்காய தேநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

வெங்காய தேநீர் பருகினால் இதய நோய் வராமல் தற்காத்து கொள்ளலாம் என ஆய்வுகள் தெரிவித்துள்ளது.

வெங்காயத்தில் இருக்கும் குர்செடின் மற்றும் பிளாவனோல் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கும் கெட்ட கொழுப்பை குறைப்பதற்கும் உதவுகிறது.

பலவகையான தேநீர்கள் புழக்கத்தில் இருக்கின்றன. வெங்காயத்தில் தயாரிக்கப்பட்ட தேநீர் பருகுவது வழக்கத்திற்கு மாறானது என்றாலும் இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு வரப்பிரசாதமாகவும் அமையும்.

ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க தினமும் ஒரு கப் வெங்காய தேநீர் குடிப்பது நல்லது.

வெங்காய தேநீர் தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள்

பெரிய வெங்காயம் – 1
பூண்டு பல் – 3
தேன் – 1 டீஸ்பூன்
தண்ணீர் – 2 கப்
பிரியாணி இலை – சிறிதளவு
எலுமிச்சை சாறு – சிறிதளவு

செய்முறை:

ஒரு அகண்ட பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்கவைக்க வேண்டும். பிறகு வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி அதோடு பிரியாணி இலை சேர்த்து கொதிக்கும் தண்ணீரில் போடவும்.

வெங்காயம், பூண்டு நன்றாக வெந்ததும் தண்ணீர் நிறம் மாறத்தொடங்கும். அதன் பிறகு பாத்திரத்தை இறக்கி வடிகட்டிக்கொள்ளவும். இதில் தேன், லவங்கப்பட்டை தூள், எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலையில் பருகலாம்.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in மருத்துவ குறிப்புகள்

Advertisement
Advertisement
To Top