மருத்துவ குறிப்புகள்
பாலில் ஒரு ஸ்பூன் நெய் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
பலருக்கு இரவு நேரத்தில் தூங்கும் முன் பால் குடிக்கும் பழக்கம் இருக்கும். இரவு தூங்கும் முன் பாலில் நெய் கலந்து குடித்தால் ஏராளமான நன்மைகளைப் பெறலாம்.
பாலில் நெய் கலந்து குடித்தால் உள்ள நச்சுக்கள் அனைத்தையும் வெளியேற்றி, உடலை சுத்தம் செய்யும்.
பாலில் நெய் கலந்து குடித்து வந்தால் உடலில் மெட்டபாலிசம் அதிகரிக்கும். அடிக்கடி செரிமான பிரச்சனைகளை சந்திப்பவர்கள் பாலில் ஒரு ஸ்பூன் நெய் கலந்து குடித்து வரலாம். இதனால் பலவீனமான செரிமான மண்டலத்தை வலுவாக்கும்.
உடலுறவின் போது நீண்ட நேரம் இன்பத்தை அனுபவிக்க உதவுகிறது. முன்கூட்டியே விந்து வெளியேறும் பிரச்சனை உள்ள ஆண்கள், இந்த பாலை இரவு தூங்கும் முன் தினமும் குடித்தால் நற்பலன் கிடைக்கும்.
கர்ப்பிணிகள் நெய் கலந்த பாலைக் குடித்து வருவதால் வயிற்றில் வளரும் குழந்தையின் எலும்புகள் மற்றும் மூளையை வலுப்படுத்த உதவுகிறது.
உங்கள் உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் இரவு தூங்கும் முன் பாலில் நெய் கலந்து குடித்து வரலாம்.
You must be logged in to post a comment Login