இசைஞானியுடன் கைகோர்க்கும் அல்போன்ஸ்.. அவரே கொடுத்த அப்டேட்!

பிற மொழி நடிகர்கள் மட்டுமல்ல, தமிழ் மக்களை பொறுத்தவரை திறமையுள்ள அனைவரையும் வரவேற்கும் உள்ளம் படைத்தவர்கள். அந்த வகையில் நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் மலையாளம் மற்றும் தமிழ் என்று இரு மொழிகளிலும் அறிமுகமான இயக்குநர் தான் அல்போன்ஸ் புத்ரன்.
நிவின் பாலி தான் இவருடைய பிரதான நாயகன் என்றே கூறலாம், இவர் இயக்கத்தில் வெளியான நேரம், பிரேமம் மற்றும் அவியல் ஆகிய திரைப்படங்கள் நின்று பேசிய படங்கள் என்றால் அது மிகையல்ல. இறுதியாக பிரபல நடிகர்கள் பிரித்விராஜ் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவான கோல்ட் என்ற படத்தை இயக்கி வெளியிட்டார்.
யார் கண்பட்டதோ தெரியவில்லை முன்பிருந்த அல்போஸ் ஆளே சுத்தமாக மாரி தற்போது வேற மாதிரி உள்ளார். இந்நிலையில் அவர் இசைஞானி இளையராஜாவை சந்தித்து பேசியுள்ளார், இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில்..
நான் அய்யா இளையராஜாவை சந்திப்பது இது 3ம் முறை, இந்த முறை அவரை சந்திக்க முக்கிய காரணம் அவரோடு ஒரு படம் பண்ணபோகிறேன். தற்போது ரோமியோ நிறுவனத்துடன் உருவாகும் படத்திற்கு அடுத்தபடியாக இந்த படம் தயாராகும் என்று கூறியுள்ளார்.