Search
Search

“எல்லாம் வயித்தெரிச்சல்” : டப்பிங் யூனியன் கட்டிட விவகாரம் – நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த ராதா ரவி

அந்த கட்டிடம் பல விதிகளை மீறி கட்டப்பட்டதாக சிலர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்

தமிழ் சினிமாவில் பல மாறுபட்ட வேடங்களில் நடித்து தனக்கென தனி இடம் பிடித்தவர் தான் ராதாரவி. நடிகர் வேல் எம். ஆர். ராதா அவர்களின் வாரிசான இவர் சென்னை சாலிகிராமத்தில் தற்போது இயங்கி வரும் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.

சமீபத்தில் அந்த டப்பிங் யூனியன் அலுவலகத்தை அதன் உறுப்பினர்களின் பணத்தை கொண்டு புதுப்பிக்கும் பணியை ராதாரவி தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அந்த கட்டிடம் பல விதிகளை மீறி கட்டப்பட்டதாக சிலர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து டப்பிங் யூனியனுக்கு ஆதரவாக தற்போது ராதாரவி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவைத் தொடர்ந்து, அதற்கான விசாரணை நடத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையினர், விதிகளின்படி டப்பிங் கட்டடம் கட்டப்பட்டுள்ளதாக ராதா ரவிக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில் டப்பிங் யூனியன் தலைவராக தான் தொடர்ந்து வெற்றி பெறுவதை சிலரால் ஜீரணிக்க முடியாததால், தன்னை குறிவைத்து டப்பிங் யூனியனுக்கு எதிராக மனு தாக்கல் செய்து வருகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

You May Also Like