Connect with us

TamilXP

அடிக்கடி ஃபேஸ் வாஷ் கிரீம் பயன்படுத்துவது நல்லதா?

beauty tips in tamil

மருத்துவ குறிப்புகள்

அடிக்கடி ஃபேஸ் வாஷ் கிரீம் பயன்படுத்துவது நல்லதா?

தினமும் 3 முறைக்கு மேல் அடிக்கடி முகம் கழுவுவது நல்லதல்ல என சரும நோய் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். காலையில் எழுந்ததும் பற்களை சுத்தம் செய்து பிறகு முகம் கழுவும் பழக்கம் அனைவருக்கும் இருக்கிறது. இது அவசியமானது. இதனால் சரும துளைகளை சுத்தம் செய்து புத்துணர்ச்சியை செய்ய கொடுக்கும்.

எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் பிற்பகலில் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவலாம். இதனால் முகத்துக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். மேலும் முகத்தில் உள்ள எண்ணெய் பசைகள் நீங்கும்.

beauty tips in tamil

வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பிய பிறகு முகத்தை கழுவ வேண்டியது அவசியம். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி முகம் பிரகாசமடையும்.

ஒவ்வொரு முறையும் முகத்தை சுத்தம் செய்யும் போது ஃபேஸ் வாஷ் கிரீம் பயன்படுத்துவது நல்லதல்ல. ஏனென்றால் அதில் உள்ள ரசாயனப் பொருட்கள் சருமத்தில் இயற்கையாக இருக்கக்கூடிய மென்மையையும் பளபளப்பையும் கெடுத்துவிடும்.

முகத்தில் எண்ணெய் பசை அதிகம் இருந்தால் டோனர் பயன்படுத்தி முகத்தை கழுவலாம். சென்சிட்டிவான சருமமாக இருந்தால் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவலாம். குழந்தைகளுக்கு பயன்படுத்தும் சோப்பு பயன்படுத்தலாம்.

Continue Reading
Advertisement
You may also like...

More in மருத்துவ குறிப்புகள்

To Top