தமிழகத்தில் 28 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – முழு விவரம்

தற்போது வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல், சிவகங்கை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
1.சென்னை, 2.காஞ்சிபுரம், 3.செங்கல்பட்டு, 4.திருவள்ளூர், 5.வேலூர், 6.ராணிப்பேட்டை, 7.திருவண்ணாமலை, 8.விழுப்புரம், 9.கடலூர், 10.திருவாரூர், 11.நாகை, 12.மயிலாடுதுறை, 13.தஞ்சை, 14.அரியலூர், 15.பெரம்பலூர், 16.புதுக்கோட்டை, 17.சேலம், 18. ராமநாதபுரம், 19. கள்ளக்குறிச்சி, 20. திருச்சி, 21.மதுரை, 22.திண்டுக்கல், 23.தேனி, 24.கரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.