• Home
Monday, June 9, 2025
TamilXP
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்New
    How to scan PDF documents in Google Drive

    Google Drive-ல் PDF ஆவணங்களை ஸ்கேன் செய்வது எப்படி? – முழுமையான வழிகாட்டி

    Google-ல் இதைத் தேடவே கூடாது.. மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து!

    Google-ல் இதைத் தேடவே கூடாது.. மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து!

    பூனைகள் பற்றி வியப்பூட்டும் சில தகவல்கள்

    பூனை கனவில் வந்தால் என்ன பலன்?

    நெடுஞ்சாலையின் நடுவே அரளிச்செடி வளர்ப்பது ஏன் தெரியுமா..?

    நெடுஞ்சாலையின் நடுவே அரளிச்செடி வளர்ப்பது ஏன் தெரியுமா..?

    கிணறுகள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது என்று நீங்கள் யோசித்தது உண்டா?

    கிணறுகள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது என்று நீங்கள் யோசித்தது உண்டா?

    How is water formed inside a coconut

    தேங்காய்க்குள் நீர் எப்படி உருவாகிறது?

    நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்?

    நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்?

    Google-ல Review எழுதி பணம் சம்பாதிக்கலாமா ?

    Google-ல Review எழுதி பணம் சம்பாதிக்கலாமா ?

    மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
No Result
View All Result
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்New
    How to scan PDF documents in Google Drive

    Google Drive-ல் PDF ஆவணங்களை ஸ்கேன் செய்வது எப்படி? – முழுமையான வழிகாட்டி

    Google-ல் இதைத் தேடவே கூடாது.. மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து!

    Google-ல் இதைத் தேடவே கூடாது.. மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து!

    பூனைகள் பற்றி வியப்பூட்டும் சில தகவல்கள்

    பூனை கனவில் வந்தால் என்ன பலன்?

    நெடுஞ்சாலையின் நடுவே அரளிச்செடி வளர்ப்பது ஏன் தெரியுமா..?

    நெடுஞ்சாலையின் நடுவே அரளிச்செடி வளர்ப்பது ஏன் தெரியுமா..?

    கிணறுகள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது என்று நீங்கள் யோசித்தது உண்டா?

    கிணறுகள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது என்று நீங்கள் யோசித்தது உண்டா?

    How is water formed inside a coconut

    தேங்காய்க்குள் நீர் எப்படி உருவாகிறது?

    நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்?

    நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்?

    Google-ல Review எழுதி பணம் சம்பாதிக்கலாமா ?

    Google-ல Review எழுதி பணம் சம்பாதிக்கலாமா ?

    மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
No Result
View All Result
TamilXP
No Result
View All Result
ADVERTISEMENT

ஆழ்வார்திருநகரி ஆதிநாத பெருமாள் கோவில் வரலாறு

by Tamilxp
August 10, 2024
in ஆன்மிகம்
A A
ஆழ்வார்திருநகரி ஆதிநாத பெருமாள் கோவில் வரலாறு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
ADVERTISEMENT

ஊர் -ஆழ்வார் திருநகரி

மாவட்டம் -தூத்துக்குடி

இதையும் படிங்க

ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில் வரலாறு

ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில் வரலாறு

November 28, 2024
குபேரனை இப்படி வழிபட்டால் வீட்டில் செல்வம் பெருகிக் கொண்டே இருக்கும்

குபேரனை இப்படி வழிபட்டால் வீட்டில் செல்வம் பெருகிக் கொண்டே இருக்கும்

April 20, 2025
கள்வப் பெருமாள் திருக்கோயில்

கள்வப் பெருமாள் திருக்கோயில்

March 9, 2025
வயலூர் முருகன் கோயில் வரலாறு

வயலூர் முருகன் கோயில் வரலாறு

March 9, 2025
ADVERTISEMENT

மாநிலம் -தமிழ்நாடு

மூலவர் -ஆதிநாதன் ,ஆதிப்பிரான் நின்ற திருக்கோலம்.

தாயார் -ஆதிநாத நாயகி ,திருக்குருகூர் நாயகி.

தல விருட்சம் -புளியமரம்.

தீர்த்தம்- தாமிரபரணி ,குபேர தீர்த்தம்.

திருவிழா- குரு பெயர்ச்சி

திறக்கும் நேரம் -காலை ஏழு முப்பது மணி முதல் பகல் 12 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை.

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 89 வது திவ்ய தேசம்.

தல வரலாறு:

காரியார் என்னும் குறுநில மன்னனுக்கும் ,உடைய நங்கைக்கும் மகனாக பிறந்தார் சடகோபர். இவர் பிறந்ததில் இருந்து கண் மூடிய நிலையிலும், அழாமலும், சாப்பிடாமலும் இருந்தார். இதை கண்ட பெற்றோர் மிகுந்த வேதனை அடைந்து சடகோபரை கோயிலுக்கு அழைத்து வந்தனர். அப்போது சடகோபர் ஓடி சென்று அங்கு இருந்த புளிய மரத்தடியில் இருந்த பொந்துக்குள்அமர்ந்தார் .அதன்பின் அவரை ஒருவராலும் அசைக்க முடியவில்லை. இப்படியாக 16 ஆண்டுகள் உணவில்லாமல் இருந்தார். ஆனால் உடல் வளர்ச்சி குன்றவில்லை. அப்போது வடநாட்டு யாத்திரைக்கு சென்றிருந்தார் மதுரகவி ஆழ்வார். இனிமையான சொற்களால் பாடுவதில் வல்லவர் என்று புகழப்பட்ட மதுரகவி ஆழ்வார்.

அயோத்தியில் இருந்தபடியே தென் திசை நோக்கி வணங்கும் போது அந்த திசையில் ஒரு பேரொளியைக் கண்டார். அந்த ஒளியை நோக்கி நடந்து வந்த மதுரகவி ஒரு புளிய மரத்தடிக்கு வந்ததும் மறைந்துவிட்டது .அந்த மரத்தடியில் ஒரு மகாஞானி இருப்பதை கண்டார் மதுரகவி ஆழ்வார். ஞானமுத்திரையுடன் மோன நிலையில் இருந்த சடகோபரை எழுப்ப நினைத்து அவர் அருகில் ஒரு கல்லை போட்டார். சடகோபர் கண்விழித்தார் அவ்விருவரின் இடையே பாடல் மூலமாக உரையாடல் நிகழ்ந்தது. இந்நிகழ்வில் இருந்து சடகோபன் “நம்மாழ்வார்’ என்ற பெயரில் மதுரகவியாழ்வார் அழைத்தார். நம்மாழ்வாரை மதுரகவியாழ்வார் தன் குருவாக ஏற்றுக்கொண்டார் .இதனாலேயே இத்தலம் நவ திருப்பதியில் குரு ஸ்தலமாக விளங்குகிறது .இங்கு பெருமாளை விட நம்மாழ்வாருக்கு தான் சிறப்பு. இங்குள்ள புளியமரம் ஏழு கிளைகளோடு உள்ளது .இரவில் உறங்காத காரணத்தினால் இம்மரம் உறங்காப்புளி என்று அழைக்கப்படுகிறது.

நவ திருப்பதியில் இது ஐந்தாவது திருப்பதி. நவகிரகத்தில் குருவுக்குரிய தலமாகும். நம்மாழ்வாருக்கு ஆதிநாத பெருமாள் குருவாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் மதுரகவியாழ்வார் தன் குருவான நம்மாழ்வாரை மங்களாசாசனம் செய்துள்ளார் .தாமிரபரணி ஆற்றங்கரையில் கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் மூன்று பிரகாரங்களுடன் கோயில் அமைந்துள்ளது. பெருமாள் இங்கு சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மூலவரின் பாதங்கள் பூமிக்குள் இருப்பதாக ஐதீகம். 5 ஆயிரம் வருடம் பழமையான நம்மாழ்வார் வீற்றிருந்த புளியமரம் இன்றும் இங்கு உள்ளது. இங்கு புளிய மரமாக லட்சுமன் இருப்பதாகவும் ,பெருமாள் பிரம்மச்சரிய யோகத்தில் இருப்பதாகவும் ஐதீகம். லட்சுமி பெருமாளை

அடைய இங்கு தவம் இருந்ததால் பிரம்மச்சாரியாக இருந்த பெருமாள், லட்சுமியை மகிழ மாலையாக தன் கழுத்தில் அணிந்து கொண்டதாக தலபுராணம் கூறுகிறது. வைணவர்கள் ஸ்ரீரங்கத்தை பரமபத வாசல் எனவும் ,ஆழ்வார்திருநகரி பரமபதத்தில் எல்லை எனவும் கூறுவார்கள். பெருமாளின் விமானத்தை விட நம்மாழ்வாரின் விமானம் சற்று பெரியது. மரத்தால் செய்யப்பட்டதைப்போலவே கல்லால் ஆன நாதஸ்வரம் ஒரு அடி நீளத்தில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

ShareTweetSend
Previous Post

பூமிபாலகர் (நவதிருப்பதி 4) திருக்கோயில்

Next Post

மகரநெடுங் குழைக்காதர் திருக்கோயில் (நவதிருப்பதி- 6)

Related Posts

கண் திருஷ்டியை விரட்டுவது எப்படி? அதன் அறிகுறிகள் என்ன?
ஆன்மிகம்

கண் திருஷ்டியை விரட்டுவது எப்படி? அதன் அறிகுறிகள் என்ன?

June 8, 2025
கருடனை எந்தெந்த கிழமைகளில் வணங்கினால் என்ன பலன் கிடைக்கும்?
ஆன்மிகம்

கருடனை எந்தெந்த கிழமைகளில் வணங்கினால் என்ன பலன் கிடைக்கும்?

June 8, 2025
varaha swamy temple
ஆன்மிகம்

சொந்த வீடு வாங்க அருள் புரியும் வராக சுவாமி கோயில்

June 8, 2025
கோவில் நிலைவாசல் படியை தாண்டி போகணுமா ? அல்லது எப்படி ?
ஆன்மிகம்

கோவில் நிலைவாசல் படியை தாண்டி போகணுமா ? அல்லது எப்படி ?

June 8, 2025
தனி வழிபாடு vs கூட்டு வழிபாடு – இரண்டிலும் என்ன வித்தியாசம்?
ஆன்மிகம்

தனி வழிபாடு vs கூட்டு வழிபாடு – இரண்டிலும் என்ன வித்தியாசம்?

June 8, 2025
21 தலைமுறை பாவங்கள் தீரும் திருத்தலம் – திருவெண்காடு!
ஆன்மிகம்

21 தலைமுறை பாவங்கள் தீரும் திருத்தலம் – திருவெண்காடு!

June 8, 2025
Next Post
மகரநெடுங் குழைக்காதர் திருக்கோயில் (நவதிருப்பதி- 6)

மகரநெடுங் குழைக்காதர் திருக்கோயில் (நவதிருப்பதி- 6)

ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகளை ஏன் நடத்துவதில்லை? உண்மையான காரணம் இதுதான்..!

ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகளை ஏன் நடத்துவதில்லை? உண்மையான காரணம் இதுதான்..!

வேங்கட வாணன் (நவதிருப்பதி 7) திருக்கோயில்

வேங்கட வாணன் (நவதிருப்பதி 7) திருக்கோயில்

ADVERTISEMENT
சீனாவில் பிரபலமாகும் ‘கட்டிப்பிடி வைத்தியம்’, இதுக்கு சமபளம் வேற, எவ்வளவு தெரியுமா ?
ட்ரெண்டிங்

சீனாவில் பிரபலமாகும் ‘கட்டிப்பிடி வைத்தியம்’, இதுக்கு சமபளம் வேற, எவ்வளவு தெரியுமா ?

பீஜிங், சீனா: தொழில்நுட்ப வளர்ச்சி, வேலைப்பளு,...

by Tamilxp
June 8, 2025
நியாபக மறதி பிரச்சனை இருக்கா? இந்த உணவுகளை டிரை பண்ணுங்க
மருத்துவ குறிப்புகள்

நியாபக மறதி பிரச்சனை இருக்கா? இந்த உணவுகளை டிரை பண்ணுங்க

நம் உடலில் மூளையின் எடை சுமார்...

by Tamilxp
June 8, 2025
How to scan PDF documents in Google Drive
தெரிந்து கொள்வோம்

Google Drive-ல் PDF ஆவணங்களை ஸ்கேன் செய்வது எப்படி? – முழுமையான வழிகாட்டி

நம் அன்றாட வாழ்க்கையில், அரசு உதவித்...

by Tamilxp
June 8, 2025
புத்திசாலிகள் அதிகம் வாழும் இந்திய மாநிலங்கள் எவை தெரியுமா? தமிழ்நாட்டுக்கு எந்த இடம்?
ட்ரெண்டிங்

புத்திசாலிகள் அதிகம் வாழும் இந்திய மாநிலங்கள் எவை தெரியுமா? தமிழ்நாட்டுக்கு எந்த இடம்?

இந்தியா என்பது உலகளவில் மக்கள் தொகையால்...

by Tamilxp
June 8, 2025
How to scan PDF documents in Google Drive
தெரிந்து கொள்வோம்

Google Drive-ல் PDF ஆவணங்களை ஸ்கேன் செய்வது எப்படி? – முழுமையான வழிகாட்டி

June 8, 2025
Google-ல் இதைத் தேடவே கூடாது.. மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து!
தெரிந்து கொள்வோம்

Google-ல் இதைத் தேடவே கூடாது.. மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து!

June 7, 2025
பூனைகள் பற்றி வியப்பூட்டும் சில தகவல்கள்
தெரிந்து கொள்வோம்

பூனை கனவில் வந்தால் என்ன பலன்?

June 7, 2025
நெடுஞ்சாலையின் நடுவே அரளிச்செடி வளர்ப்பது ஏன் தெரியுமா..?
தெரிந்து கொள்வோம்

நெடுஞ்சாலையின் நடுவே அரளிச்செடி வளர்ப்பது ஏன் தெரியுமா..?

June 7, 2025
கிணறுகள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது என்று நீங்கள் யோசித்தது உண்டா?
தெரிந்து கொள்வோம்

கிணறுகள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது என்று நீங்கள் யோசித்தது உண்டா?

June 7, 2025
How is water formed inside a coconut
தெரிந்து கொள்வோம்

தேங்காய்க்குள் நீர் எப்படி உருவாகிறது?

June 7, 2025
  • பழங்களின் பெயர்கள் பட்டியல்
  • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
  • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
  • 108 திவ்யதேசங்கள்

© 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்

© 2025 Bulit by Texon Solutions.