இன்றைய அவசர வாழ்க்கையில் கிரெடிட் கார்டுகள் பண தேவையை சமாளிக்க தேவைப்படுகிறது. ஆனால் அதை சரியாக பயன்படுத்தவில்லை என்றால் பல சிக்கல்கள் ஏற்படலாம். இந்த பதிவில், கிரெடிட் கார்டு தவறான பயன்பாட்டால் ஏற்படும் சில பிரச்சனைகளையும், அதை எப்படி தவிர்க்கலாம் என்பதையும் பார்ப்போம்.
அதிக வட்டி சுமை:
கிரெடிட் கார்டுகளுக்கு ஆண்டுக்கு 18% முதல் 36% வரை வட்டி வசூலிக்கப்படும். “முழு தொகையை செலுத்த வேண்டாம்” என கூறப்படும் இடத்தில் மாட்டிக் கொள்ளாதீர்கள். குறைந்த தொகையை மட்டும் செலுத்தினால், மீதமுள்ள தொகைக்கு அதிக வட்டி கட்ட வேண்டிய நிலை ஏற்படும். இது மெதுவாக பொருளாதார சுமையை கூட்டும்.
தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
மாத மாதமாக முழு தொகையை செலுத்துங்கள். முடியாவிட்டால் அதிக வட்டியுள்ள கார்டுகளுக்கான தொகையை முதலில் செலுத்துங்கள்.
கிரெடிட் ஸ்கோர் பாதிப்பு:
ஒரே ஒரு தவறான அல்லது தாமதமான பேமெண்ட் கூட உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கக்கூடும். இது 7 வருடங்கள் வரைக்கும் உங்கள் பேமெண்ட் வரலாற்றில் பதிவாகும். இதனால் எதிர்காலத்தில் கடன் பெறும் வாய்ப்பு குறையும்.
தவிர்க்க என்ன செய்யலாம்?
ஆட்டோமேட்டிக் பேமெண்ட் அமைக்கவும் அல்லது ரிமைண்டர் வைத்துக் கொள்ளவும். பேமெண்ட் முழுமையாக முடியாதபட்சத்தில் குறைந்தபட்ச தொகையாவது செலுத்துங்கள்.