புதுடெல்லி: சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் வழங்கும் முறையில் புதிய கட்டுப்பாடு கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. மோசடிகளைத் தடுக்கவும், மானியங்களை சரியான நபர்களிடம் மட்டும் வழங்கும் நோக்கத்துடனும், 2024 மார்ச் மாதம் முதல் பயோமெட்ரிக் பதிவு முறையை அமல்படுத்தியுள்ளது.
பயோமெட்ரிக் பதிவு என்றால் என்ன?
பயோமெட்ரிக் பதிவு என்பது நபரின் ஆதார் எண், கருவிழி (iris) ஸ்கேன், மற்றும் விரல்முனை அச்சு போன்ற தனிப்பட்ட தகவல்களை பதிவு செய்வது. இது மூலம் ஒரு நபர் உண்மையான நுகர்வோரா என்பதை உறுதிப்படுத்த முடியும்.
வீடு வீடாக விழிப்புணர்வு! ஏஜென்சி ஊழியர்களின் புதிய பணி
இணையத்தில், “பதிவில்லாத நபர்களுக்கு சிலிண்டர் வழங்கப்படாது” எனும் தகவல்கள் பரவியதால், பொதுமக்கள் கவலையில் உள்ளனர். ஏராளமான வாடிக்கையாளர்கள் தங்கள் பயோமெட்ரிக் விபரங்களை உறுதி செய்ய, நேரில் கியாஸ் ஏஜென்சிகளை நாடத் தொடங்கியுள்ளனர்.
போதிய தகவல் இல்லாத பகுதிகளில், கியாஸ் நிறுவன ஊழியர்கள் தற்போது வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
எங்கு பதிவு செய்வது? எப்படி செயல்படுகிறது?
- நேரில் அருகிலுள்ள கியாஸ் ஏஜென்சி அல்லது முகாம்களில் கலந்து கொண்டு பதிவு செய்யலாம்.
- உங்கள் ஆதார் கார்டுடன் செல்லவும்.
- உங்கள் விரல் அடையாளம் மற்றும் கருவிழி ஸ்கேன் மூலம் பயோமெட்ரிக் உறுதி செய்யப்படும்.
- இது முடிந்ததும், சிலிண்டர் விநியோகம் வழக்கம்போல் தொடரும்.
யார் பதிவு செய்ய வேண்டும்?
- எல்லா வாடிக்கையாளர்களும் இந்த பயோமெட்ரிக் பதிவை மேற்கொள்ள வேண்டும்.
- முன்பு பதிவு செய்திருந்தாலும், தகவல் புதுப்பிக்கப்படுகிறதா என்பதைக் உறுதி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.
இதன் முக்கிய நோக்கம் என்ன?
மத்திய அரசின் தகவலின்படி, இந்த புதிய முறை:
- மோசடி கணக்குகளில் சிலிண்டர் விநியோகத்தை தவிர்க்க
- தகுதி இல்லாத நபர்களுக்கு மானியங்கள் செல்லுவதைத் தடுக்கும்
- விண்ணப்பதாரரின் உண்மை அடையாளத்தை உறுதி செய்ய ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கொண்டு வரப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு என்பது அனைவரும் பயன்படுத்தும் அத்தியாவசிய சேவை. அதனால், மத்திய அரசு கொண்டு வந்த புதிய பயோமெட்ரிக் பதிவு முறை மக்கள் அனைவருக்கும் பயனுள்ளதாய் அமையும் என நம்பப்படுகிறது.