நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காகவே ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரேஷன் திட்டத்தின் கீழ் மலிவு விலையிலும் இலவசமாகவும் ரேஷன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே இந்த உதவிகளை எல்லாம் பெற முடியும்.
கேஒய்சி சரிபார்ப்பை ஜூன் 30க்குள் முடிக்க வேண்டியது அவசியம். இதை செய்யாதவர்கள் ரேஷன் உதவிகள் நிறுத்தப்படுவதோடு, ரேஷன் கார்டும் ரத்து செய்யப்படும் அபாயம் உள்ளது.
கேஒய்சி செய்வது எப்படி?
உங்கள் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் அட்டை ஆகியவை உங்கள் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அருகிலுள்ள ரேஷன் கடை அல்லது அரசு சேவை மையத்தில் நேரடியாக கைரேகை அல்லது கருவிழி ஸ்கேன் மூலம் கேஒய்சி செய்யலாம்.
ஆன்லைனில் உங்கள் மாநில உணவு பாதுகாப்பு போர்டல் அல்லது மத்திய அரசு வழங்கும் இணையதளத்தில் சென்று, ரேஷன் கார்டு எண் மற்றும் ஆதார் எண்ணை பயன்படுத்தி கேஒய்சி செயல்முறையை முடிக்கலாம். ஆன்லைனில் OTP மூலம் அடையாளம் உறுதிப்படுத்தப்படும்.
ஏன் கேஒய்சி அவசியம்?
போலியான ரேஷன் கார்டுகளை கண்டறிந்து நீக்குவதற்கும், உண்மையான ஏழை மற்றும் தேவையுள்ள மக்களுக்கு மட்டுமே ரேஷன் உதவிகள் செல்லும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனால், ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் உடனே கேஒய்சி சரிபார்ப்பை செய்து, ஜூன் 30க்குள் முடிக்க வேண்டும். இல்லையெனில், ரேஷன் உதவிகள் நிறுத்தப்பட்டு, ரேஷன் கார்டும் ரத்து செய்யப்படும்.