Search
Search

காது வலி குணமாக வீட்டு மருத்துவம்

kaathu vali home remedies tamil

தேங்காய் எண்ணெயில் பெருங்காயம் சேர்த்து காய்ச்சி வடிகட்டி கொண்டபின் சிறிதளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி வடிகட்டி சற்று சூடாக இருக்கும்போது காதுகளில் ஒரு சில துளிகள் விடவும்.

kaathu vali home remedies tamil

கற்பூரத்தை காய்ச்சி அதன் சில துளிகளை காதுகளில் விடவும். அந்த கற்பூரத்தை காலடியில் கழுத்துப் பகுதிகளில் நன்கு சூடு பறக்கத் தேய்த்து விட காது வலி குணமாகும்.

புத்தம் புதிய ஒரு சில வெற்றிலையை எடுத்து சாறு பிழிந்து ஒரு சில துளிகள் வலியுள்ள காதுகளில் விட்டால் காதுவலி குறையும்.

காது வலி வந்தால் தேங்காய் எண்ணெயை சூடேற்றி அதில் சிறிது உப்பு போட்டு மிதமான சூட்டில் காதில் விட்டால் காதில் இருக்கும் புண் ஆறி வலி குறையும்.

கிராம்பை நல்லெண்ணெய்யில் போட்டு வதக்கி இந்த வெதுவெதுப்பான எண்ணெய்யை சில சொட்டுகள் காதில் ஊற்ற வலி குறையும்.

அருவி கடல் போன்ற பகுதிகளில் குளிக்கும்போது காதுகளில் நீர் புகாத வண்ணம் பார்த்துக் கொள்வது அவசியம். ஒலி அதிகமுள்ள இடங்களில் அதிக நேரம் இருக்காமலும் பார்த்துக் கொள்ளலாம்.

Leave a Reply

You May Also Like