Search
Search

பொன்னியின் செல்வன் பாகம் 2.. இதுவரை உலக அளவில் வசூல் செய்தது எத்தனை கோடி தெரியுமா?

கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி உலக அளவில் வெளியானது பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம். ஏற்கனவே முதல் பாகம் அடைந்த வெற்றியை அடுத்து இந்த இரண்டாம் பாகம் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.

இருப்பினும் பொன்னியின் செல்வனின் ஐந்து புத்தகங்களையும் வாசித்த பல வாசகர்கள், புத்தகத்தில் உள்ள சில விஷயங்கள் திரைப்படத்தில் மாறுபட்டுள்ளது என்று கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் படம் வெளியாகி சுமார் 10 நாட்கள் ஆன நிலையில் தற்போது அந்த படத்தின் வசூல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

உலக அளவில் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் இதுவரை சுமார் 300 கோடி வசூல் செய்திருப்பதாக பட குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழில் உள்ள தற்போதைய முன்னணி நட்சத்திரங்கள் பலர் ஒன்றிணைந்து உருவாக்கிய இந்த மாபெரும் திரைப்படத்தை பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கியிருந்தார்.

பிரபல லைகா நிறுவனம் இந்த படத்திற்கு தயாரிப்பு பணிகளை மேற்கொண்ட நிலையில் இசை புயல் ஏ.ஆர் ரகுமான் இசையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிக்கும் வண்ணம் இருந்தது.

You May Also Like