Connect with us

Health Tips in Tamil, Tamil Health Tips

சாந்தியாசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன?

யோகாசனம்

சாந்தியாசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன?

மன அடக்கம், மனவலிமை, மன அமைதி இவற்றை மனத்தில் நினைத்த மாத்திரத்தில் நிலை நிறுத்தக் கூடிய ஆசனம் சாந்தியாசனம். இதற்கு சவாசனம் என்ற பெயரும் உண்டு. பேச்சு மூச்சற்று செத்த சவம் போலிருந்து மனதை ஒரு நிலைப்படுத்த சொன்ன சித்தர்களின் நோக்கம் இந்த சாந்தியாசனத்தால் நிறைவேறும்.

savasana benefits in tamil

சாந்தியாசனம் செய்முறை

தரைவிரிப்பில் மல்லாந்து படுத்துக் கொண்டு கால், கைகளை தளர்த்தி சதைக் கூட்டங்களை தன் வசமிழந்த நிலையிலிருக்கச் செய்யவும்.

கண்களை மூடிக் கொண்டு மனதை இறைவன் பால் நிலை நிறுத்தி சுமார் ஐந்து நிமிடம் முதல் பத்து நிமிடங்கள் வரை இருக்கவும். இதுவே சாந்தியாசனம் என்பபடும். பின்னர் உடலை அசைத்து இயல்பு நிலைக்குத் திரும்பவும்.

சாந்தியாசனத்தின் பலன்கள்

உடலில் ஏற்படும் அனைத்து வியாதிகளையும் போக்க வல்லது.
மனம் ஒரு நிலைப்படும்.
மனம் அமைதியடையும்.

மேலும், அனைத்து யோகாசனங்கள் மற்றும் அதன் பலன்களையும் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in யோகாசனம்

Advertisement
Advertisement
To Top