“கிளாப் அடிச்சு துவங்கி வைத்த உலக நாயகன்” – SK 21 படப்பிடிப்பு ஆரம்பம்!

உலக நாயகன் கமல் அவர்களுடைய தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தில் கதையின் நாயகனாக களமிறங்குகிறார் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவான சிவகார்த்திகேயன்.
காஷ்மீரில் இந்த படத்திற்கான பிடிப்பு தொடங்க உள்ள நிலையில், இந்த படப்பிடிப்பை கிளாப் அடித்து துவங்கி வைத்துள்ளார் உலக நாயகன் கமல்ஹாசன். கதையின் நாயகியாக சாய் பல்லவி முதன் முதலில் சிவகார்த்திகேயன் அவர்களோடு ஜோடி சேர்கிறார்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் SK 21 படப்பிடிப்பு துவங்கிய நிகழ்வு குறித்த ஒரு காணொளியை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த படத்தில் ஒரு ராணுவ அதிகாரியாக சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த கதாபாத்திரத்திற்கு என்று பிரத்தியேகமாக சில பயிற்சிகளை அவர் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இந்த படம் குறித்த பல அப்டேட்டுகளை தொடர்ந்து எதிர்பார்க்கலாம் என்று படக்குழு தெரிவித்துள்ளது.