Connect with us

Health Tips in Tamil, Tamil Health Tips

பூஜை அறையில் கல் உப்பு வைப்பதால் பிரச்சனை தீருமா? உண்மை என்ன?

ஆன்மிகம்

பூஜை அறையில் கல் உப்பு வைப்பதால் பிரச்சனை தீருமா? உண்மை என்ன?

நம் வாழ்க்கையில் இருக்கும் பணப்பிரச்சனைகளுக்கும் தீராத உடல் ஆரோக்கியம் சம்மந்தமான பிரச்சனைக்கும் தீர்வு தரக்கூடிய அற்புத பரிகாரம்தான் இந்த உப்பு பரிகாரம். அதை எப்படி முறையாக செய்ய வேண்டும்? அதனால் என்னென்ன பயன்கள் கிடைக்கும் எனும் சூட்சமத்தை அறிந்து கொள்ளுங்கள்.

கல் உப்பு என்பது பாற்கடலில் இருந்து எடுக்கப்படுவதால், ஆன்மீகத்தில் மகாலட்சுமிக்கு இணையாக பார்க்கப்படுகிறது. பாற்கடலில் வீற்றிருக்கும் மகாலட்சுமியின் பாதம்பட்ட இந்த கல் உப்பு வீட்டில் இருந்தாலே, அந்த வீடு சுபிட்சம் பெறும் என்பது ஐதீகம். அதனால் தான் நம் முன்னோர்கள் சாதாரண உப்பை விட கல் உப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தனர்.

தூள் உப்பை தவிர்த்து விட்டு இன்றே கல் உப்பை பயன்படுத்த துவங்குங்கள். கல் உப்பை வெள்ளிக் கிழமைகளில் வாங்குவது சகல, சவுபாக்கியங்களையும் பெருக செய்யும் என்பது நம்பிக்கை. இந்த கல் உப்பை எப்போதும் பீங்கான் ஜாடியில் தான் போட்டு பயன்படுத்த வேண்டும். அதில் ஐந்து ரூபாய் நாணயங்களை சேர்த்து போட்டு வைப்பது அவசியம். இது மேலும் பணம் பெருகுவதற்கு வழிவகுக்கும்.

அதே போல உங்களுடைய பூஜை அறையில் கொஞ்சமாக ஒரு பித்தளை அல்லது செம்பு கிண்ணத்தில் கல் உப்பை நிரப்பிக் கொள்ளுங்கள். அதில் நான்கைந்து மிளகுகளைப் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். கல் உப்பு, மிளகுடன் சேரும்பொழுது பணப் பிரச்சனைகளும், ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகளும் கண்டிப்பாக தீரும்.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in ஆன்மிகம்

Advertisement
Advertisement
To Top